சென்னை: அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளை (IAS/IPS) எழுத ஆயத்தமாகி வருபவர்களுக்கு முதன்மைத் தேர்வு (primary exam), முதல் நிலை தேர்வு (first level exam), மாதிரி ஆளுமை தேர்வு (sample personality test), ஆகியவற்றுக்காக தமிழக அரசு இலவச பயிற்சியை வழங்குகிறது. மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக 25 ஆயிரம் வழங்கப்படவும் உள்ளது.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு மையம் சென்னையில் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் இங்கு மத்திய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக உள்ளவர்களுக்கும் முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது. தகுதியானவர்களுக்கு ஜூலை 5 மற்றும் 6 தேதி அட்மிஷன் நடைபெறுகிறது. இதில் அட்மிஷன் பெற்றவர்களுக்கு நாளை முதல் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
இந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தகுதியானவர்களுக்கும் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல் செப்டம்பர் வரை மூன்று மாதங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் விண்ணப்பதாரர்கள் மட்டுமின்றி ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற விண்ணப்பதாரர்களும் இந்தப் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
இந்த பயிற்சி மையத்தில் மூன்று மாத காலம் பயிற்சி பெறுபவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் ரூபாய் 25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் என்ன தாமதம், உடனடியாக விண்ணப்பியுங்கள், பயன் பெறுங்கள்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}