நீங்க ஐஏஎஸ் ஆக ஆசைப்படறீங்களா.. உதவி தேவைப்படுதா.. அப்படீன்னா முதல்ல இத படிங்க!

Jul 08, 2024,01:15 PM IST

சென்னை:   அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளை (IAS/IPS) எழுத ஆயத்தமாகி வருபவர்களுக்கு முதன்மைத் தேர்வு (primary exam), முதல் நிலை தேர்வு (first level exam), மாதிரி ஆளுமை தேர்வு (sample personality test), ஆகியவற்றுக்காக தமிழக அரசு இலவச பயிற்சியை வழங்குகிறது. மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக 25 ஆயிரம் வழங்கப்படவும் உள்ளது.


தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு மையம் சென்னையில் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.




அது மட்டுமல்லாமல் இங்கு மத்திய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக உள்ளவர்களுக்கும் முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும்  இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது.  தகுதியானவர்களுக்கு ஜூலை 5 மற்றும் 6 தேதி அட்மிஷன் நடைபெறுகிறது. இதில் அட்மிஷன் பெற்றவர்களுக்கு நாளை முதல் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.


இந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தகுதியானவர்களுக்கும் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல் செப்டம்பர் வரை மூன்று மாதங்கள்  அளிக்கப்பட உள்ளது. மேலும் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் விண்ணப்பதாரர்கள் மட்டுமின்றி ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற விண்ணப்பதாரர்களும் இந்தப் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.


இந்த பயிற்சி மையத்தில் மூன்று மாத காலம் பயிற்சி பெறுபவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் ரூபாய் 25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்னும் என்ன தாமதம், உடனடியாக விண்ணப்பியுங்கள், பயன் பெறுங்கள்.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்