சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் 9 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
திமுக அரசு அறிவித்த முக்கிய அறிவிப்புகளில் ஒன்று இந்த பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் நிறுவுதல் ஆகும். அதன்படி தற்போது 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த விடுதிகளில் 24 மணி நேர பாதுகாப்பு, பார்க்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம் என்பது கூடுதல் செய்தியாகும்.
அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த வசதியைப் பெற விரும்புவோர், இதுதொடர்பாக 94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் http://tnwwhcl.in என்ற இணையதளத்தில் விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை நிமித்தமாக சொந்த வீட்டை விட்டு வெளியூர் வந்து பணியாற்றும் மகளிருக்கு இது மிகப் பெரிய உதவியாக அமையும். அரசே நடத்தும் விடுதி என்பதால் கூடுதல் பாதுகாப்பும் கிடைக்கும் என்பதால் வேலை பார்க்கும் பெண்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு பலன் அடையலாம்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}