சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் 9 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
திமுக அரசு அறிவித்த முக்கிய அறிவிப்புகளில் ஒன்று இந்த பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் நிறுவுதல் ஆகும். அதன்படி தற்போது 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த விடுதிகளில் 24 மணி நேர பாதுகாப்பு, பார்க்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம் என்பது கூடுதல் செய்தியாகும்.
அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த வசதியைப் பெற விரும்புவோர், இதுதொடர்பாக 94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் http://tnwwhcl.in என்ற இணையதளத்தில் விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை நிமித்தமாக சொந்த வீட்டை விட்டு வெளியூர் வந்து பணியாற்றும் மகளிருக்கு இது மிகப் பெரிய உதவியாக அமையும். அரசே நடத்தும் விடுதி என்பதால் கூடுதல் பாதுகாப்பும் கிடைக்கும் என்பதால் வேலை பார்க்கும் பெண்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு பலன் அடையலாம்.
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}