சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் 9 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
திமுக அரசு அறிவித்த முக்கிய அறிவிப்புகளில் ஒன்று இந்த பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் நிறுவுதல் ஆகும். அதன்படி தற்போது 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த விடுதிகளில் 24 மணி நேர பாதுகாப்பு, பார்க்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம் என்பது கூடுதல் செய்தியாகும்.
அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த வசதியைப் பெற விரும்புவோர், இதுதொடர்பாக 94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் http://tnwwhcl.in என்ற இணையதளத்தில் விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை நிமித்தமாக சொந்த வீட்டை விட்டு வெளியூர் வந்து பணியாற்றும் மகளிருக்கு இது மிகப் பெரிய உதவியாக அமையும். அரசே நடத்தும் விடுதி என்பதால் கூடுதல் பாதுகாப்பும் கிடைக்கும் என்பதால் வேலை பார்க்கும் பெண்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு பலன் அடையலாம்.
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}