சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்னையில் இருந்து 14,104 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா இந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் முன் கூட்டியே தங்களின் பயணத்தை திட்டமிட துவங்கி விட்டார்கள்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோரின் வசதிக்காக ஏற்கனவே பல சிறப்பு ரயில்களை சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஜனவரி 06ம் தேதியான இன்று துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசும் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் பணியாற்றுபவர்களின் வசதிக்காக ஜனவரி 10,11,12,13 ஆகிய நாட்களுக்கு 14,104 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 8368 பஸ்களுடன் இந்த குறிப்பிட்ட நாட்களில் கூடுதலாக 5736 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதனால் மொத்தமாக 14,104 சிறப்பு பஸ்கள் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இயக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு பண்டிகை சமயத்திலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல், சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விடுமுறைகள் உள்ளிட்டவற்றுக்கு அதிக அளவிலான சிறப்புப் பேருந்துகளை இயக்குவது வழக்கம். இந்தப் பேருந்துகளுக்கு நல்ல மவுசும் உண்டு. தற்போதும் அதேபோல சிறப்பு்ப பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து இவை இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதேபோல ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}