சென்னையில் விட்டு விட்டு வச்சு செய்யும் கனமழை .. 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Mar 11, 2025,05:18 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 8 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் தமிழ்நாடு முழுவதும் இருள் சூழ்ந்து மேகக் கூட்டங்கள் ஒன்று திரண்டு மழை வருவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழையுடன் தொடங்கி தற்போது விட்டு விட்டு மழை  பெய்து வருகிறது.


அதேபோல் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னையில் காலை முதல் இருள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. அநேக இடங்களில்  பரவலாக மிதமான மழையும், சேப்பாக்கம், அண்ணா நகர், முகப்போர், மந்தவெளி, மயிலாப்பூர், எம் ஆர் சி நகர், அடையாறு உள்ளிட்ட  பகுதிகளில் கனமழையும்  பெய்து வருகிறது. 




இந்த நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி


இன்று மிக கனமழை: 


கன்னியாகுமரி,

திருநெல்வேலி,

தென்காசி,

தூத்துக்குடி , 

ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


இன்று கனமழை:


விருதுநகர், சிவகங்கை,

மயிலாடுதுறை, 

தஞ்சாவூர், திருவாரூர்,

நாகப்பட்டினம்,

புதுக்கோட்டை,

ராமநாதபுரம்,

ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. ‌


சென்னை மழை:


சென்னையிலும் இன்று இடியுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளது.


நாளை கனமழை: 


கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

news

கட்ட பஞ்சாயத்து செய்யவா மக்கள் ஓட்டு போட்டார்கள்? பூவை ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

news

ஐபிஎல் லைட்டை நாங்கதான் ஹேக் பண்ணோம் தெரியுமா.. காமெடி செய்த பாகிஸ்தான் அமைச்சர்!

news

ரஜினிகாந்த், விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா? தவாக தலைவர் வேல்முருகன்

news

2026ல் தொடங்குகிறது சென்சஸ் கணக்கெடுப்பு.. முதலில் லடாக், காஷ்மீரில் தொடங்கும்.. மத்திய அரசு

news

பாமகவின் இரு தலைவர்களும் பேச வேண்டும்: பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி

news

தமிழ்நாட்டை கத்தி.. அரிவாள்.. துப்பாக்கி பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி

news

இஸ்ரேல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால்.. எங்களுக்காக பாகிஸ்தான் பதில் தரும்.. ஈரான்

news

இஸ்ரேலுக்கு முழுமையான பதிலடி தருவோம்.. அதுவரைக்கும் போர் நிறுத்தம் கிடையாது.. ஈரான் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்