தமிழ்நாடு சட்டசபை டிசம்பர் 9ம் தேதி கூடுகிறது.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

Nov 25, 2024,02:40 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9ம் தேதி  கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டசபை கடைசியாக கடந்த ஜூன் 20ம் தேதி கூடியது. அப்போது, மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல், அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏக்களின் விவாதம் அமைச்சர்களின் பதிலூரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 20ம் தேதி தொடங்கி கூட்டம் ஜூன் 29ம் தேதி வரை 9 நாட்கள் காலையிலும், மாலையிலும் சட்டப்பேரவை நடைபெற்றது.




கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அதிமுகவினர் அமளி செய்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


இந்த நிலையில் அடுத்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9ம் தேதி கூட உள்ளதாக சபாநயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுத்து அறிவிக்கும் என்றும், சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்படும் நாட்கள் குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய அலுவல் குழு ஆய்வு கூட்டம் முடிவு செய்யும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.


டிசம்பர் 9ம் தேதி, திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரு கேள்வி - கொதியாய் கொதித்த வைகோ: திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு

news

வாட்ஸ்அப்பில் இனி மொபைல் எண்கள் தேவையில்லை! வந்தது புதிய வசதி

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை; ஆனால்...: நடிகர் லாரன்ஸ் சொன்னது என்ன?

news

காற்றே உன் பெயரைக் கேட்டேன்

news

அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: திடீரென வாபஸ் பெற்ற டி.ஆர்.பாலு

news

அதிமுகவிலிருந்து விலகி.. தவெக.வில் இணையும் 2 விஜயபாஸ்கர்கள்...அடுத்து என்ன நடக்கும்?

news

அதிமுக.,வில் மீண்டும் பரபரப்பு: இபிஎஸ் கூட்டத்தை புறக்கணிக்க வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் முடிவு?

news

முதல்வர் விஜய் தலைமையிலான.. தவெக அரசு கவிழ வாய்ப்பே இல்லை : திருமாவளவன் உறுதி

news

புறக்கணிப்பின் உச்சமும், ஒப்பீட்டின் வன்மமும்.. ராமநாதபுரம் கொடூரக் கொலையின் உளவியல் பின்னணி!

அதிகம் பார்க்கும் செய்திகள்