சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9ம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கடைசியாக கடந்த ஜூன் 20ம் தேதி கூடியது. அப்போது, மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல், அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏக்களின் விவாதம் அமைச்சர்களின் பதிலூரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 20ம் தேதி தொடங்கி கூட்டம் ஜூன் 29ம் தேதி வரை 9 நாட்கள் காலையிலும், மாலையிலும் சட்டப்பேரவை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அதிமுகவினர் அமளி செய்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அடுத்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9ம் தேதி கூட உள்ளதாக சபாநயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுத்து அறிவிக்கும் என்றும், சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்படும் நாட்கள் குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய அலுவல் குழு ஆய்வு கூட்டம் முடிவு செய்யும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
டிசம்பர் 9ம் தேதி, திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!
என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?
உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ஆஸ்திரேலியாவை அதிர வைத்த பாகிஸ்தானி அப்பா மகன்.. 16 பேரின் உயிரைப் பறித்த கொடுமை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 15, 2025... இன்று உதவிகள் தேடி வரும்
{{comments.comment}}