சென்னை: வட தமிழ்நாட்டில் அடுத்த 4-5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக வெள்ளி மற்றும் சனிக்கிழமை மிகவும் வெப்பமான நாட்களாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதேபோல் சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் அணைகள் மற்றும் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்தது. அதே சமயத்தில் வெப்பம் குறைந்து குளுமையான சூழல் நிலவியது.
இதற்கிடையே ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் வட தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
ராயலசீமா, கர்நாடகத்தின் உட்புறப் பகுதிகளிலிருந்து வடமேற்கிலிருந்து வரும் வறண்ட காற்று வடக்கு தமிழ்நாட்டிற்குள் வீசும். இந்த காற்று வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மேற்கு உட்புற சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை அடையும். அடுத்த 4-5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக - வெள்ளி மற்றும் சனிக்கிழமை மிகவும் வெப்பமான நாட்களாக இருக்கும்.
சென்னை மீனம்பாக்கத்தில் ஆண்டின் முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யக்கூடும். வேலூரில் 41+ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜூன் 21, 22 சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
22ம் தேதி முருகனை கையில் எடுப்பது போல் 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்: நயினார் நாகேந்திரன்
சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு... தமிழ்த் திரையுலகுக்கு புதுத் தெம்பு.. கமல்ஹாசனின் ரியல் Thuglife
கமல்ஹாசனை எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்லலாம்.. தக்லைபுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி
காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை: எடப்பாடி பழனிச்சாமி!
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 குறைவு!
சிறுவன் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்
4 ராசிகளில் நீங்களும் ஒருவரா?..2025ல் பெரிய கோடீஸ்வரரா ஆய்ருவீங்களாம்ய்யா..பாபா வங்காவே சொல்லிட்டாரு
{{comments.comment}}