சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

Apr 10, 2025,10:26 AM IST

சென்னை: வட தமிழ்நாட்டில் அடுத்த 4-5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக  வெள்ளி மற்றும் சனிக்கிழமை மிகவும் வெப்பமான நாட்களாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதேபோல் சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் அணைகள் மற்றும் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்தது. அதே சமயத்தில் வெப்பம் குறைந்து குளுமையான சூழல் நிலவியது.


இதற்கிடையே ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.




இந்த நிலையில்  வட தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்


ராயலசீமா, கர்நாடகத்தின் உட்புறப் பகுதிகளிலிருந்து வடமேற்கிலிருந்து வரும் வறண்ட காற்று வடக்கு தமிழ்நாட்டிற்குள் வீசும். இந்த காற்று வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மேற்கு உட்புற சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை அடையும். அடுத்த 4-5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக - வெள்ளி மற்றும் சனிக்கிழமை மிகவும் வெப்பமான நாட்களாக இருக்கும்.


சென்னை மீனம்பாக்கத்தில் ஆண்டின் முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யக்கூடும். வேலூரில் 41+ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை

news

விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து

news

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?

news

Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

news

இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்