சென்னை: வட தமிழ்நாட்டில் அடுத்த 4-5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக வெள்ளி மற்றும் சனிக்கிழமை மிகவும் வெப்பமான நாட்களாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதேபோல் சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் அணைகள் மற்றும் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்தது. அதே சமயத்தில் வெப்பம் குறைந்து குளுமையான சூழல் நிலவியது.
இதற்கிடையே ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் வட தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
ராயலசீமா, கர்நாடகத்தின் உட்புறப் பகுதிகளிலிருந்து வடமேற்கிலிருந்து வரும் வறண்ட காற்று வடக்கு தமிழ்நாட்டிற்குள் வீசும். இந்த காற்று வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மேற்கு உட்புற சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை அடையும். அடுத்த 4-5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக - வெள்ளி மற்றும் சனிக்கிழமை மிகவும் வெப்பமான நாட்களாக இருக்கும்.
சென்னை மீனம்பாக்கத்தில் ஆண்டின் முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யக்கூடும். வேலூரில் 41+ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!
யாசகத்தோழி!
வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!
பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!
சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!
Fermented rice: பழைய சோறு.. வெயில் வந்தாலே.. இதுவும் நம்மை நாடி வந்து விடும்!
Housewives எல்லாம் சும்மா இல்லைங்க.. அவர்கள் பாராட்டப்படாத உழைப்பாளிகள்!
Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!
World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!
{{comments.comment}}