சென்னை: வட தமிழ்நாட்டில் அடுத்த 4-5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக வெள்ளி மற்றும் சனிக்கிழமை மிகவும் வெப்பமான நாட்களாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதேபோல் சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் அணைகள் மற்றும் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்தது. அதே சமயத்தில் வெப்பம் குறைந்து குளுமையான சூழல் நிலவியது.
இதற்கிடையே ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் வட தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
ராயலசீமா, கர்நாடகத்தின் உட்புறப் பகுதிகளிலிருந்து வடமேற்கிலிருந்து வரும் வறண்ட காற்று வடக்கு தமிழ்நாட்டிற்குள் வீசும். இந்த காற்று வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மேற்கு உட்புற சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை அடையும். அடுத்த 4-5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக - வெள்ளி மற்றும் சனிக்கிழமை மிகவும் வெப்பமான நாட்களாக இருக்கும்.
சென்னை மீனம்பாக்கத்தில் ஆண்டின் முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யக்கூடும். வேலூரில் 41+ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
{{comments.comment}}