துபாய்: தமிழக வரலாற்றாய்வாளர் கீழக்கரை ச.சி.நெ. அப்துல் றஸாக், தான் எழுதிய ஆட்சி பீடம் கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களின் வரலாற்று முதல் மற்றும் இரண்டாம் பாகம் நூல்களை துபாய் நகரின் பிரமாண்ட நூலகமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு, அன்பளிப்பாக வழங்கினார். இந்த நூல்களை நூலக அதிகாரி முஹம்மது பெற்றுக் கொண்டார்.
நேற்று உலக நூலக தினம் என்பதால் அதையொட்டி, துபாய் நகரில் மிக பிரம்மாண்டமான நூலகத் திருவிழா முகமது பின் ராஷித் நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமீரக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், கீழக்கரை முஹம்மது யாசின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது தமிழக வரலாற்றாசிரியர் அப்துல் றஸாக் அவர்கள் எழுதிய வரலாற்று நூல்களும் பரிசாக வழங்கியுள்ளார்.

இது குறித்து வரலாற்றாய்வாளர் ச.சி.நெ. அப்துல் றஸாக் கூறுகையில், துபாய் நகரின் ஆட்சியாளர் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் இத்தகைய பிரமாண்ட நூலகத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதில் தமிழ் நூல்களும் இடம் பெற வாய்ப்பளித்திருப்பதற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் மொழி தோட்டம் என்ற இடத்தை ஏற்படுத்தி அதில் ஆட்சியாளரின் பொன்மொழிகள் உலகின் பல்வேறு மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியும் இடம் பெற செய்திருப்பதன் மூலம் தமிழ் மொழிக்கு துபாய் நகரம் அளித்து வரும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள முடிகிறது என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
ஜீவனின் ஜீவிதம்!
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்
மங்கலா.. சமூகத்தில் ஒரு ஒளி.. (மீண்டும் மங்கலம்.. மினி தொடர்கதை - 6)
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு!
சென்னையிலும், புறநகர்களிலும் ஜில் ஜில் மழை.. சிலுசிலுவென மாறிய கிளைமேட்.. என்ஜாய் பண்ணுங்க மக்களே!
{{comments.comment}}