துபாய்: தமிழக வரலாற்றாய்வாளர் கீழக்கரை ச.சி.நெ. அப்துல் றஸாக், தான் எழுதிய ஆட்சி பீடம் கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களின் வரலாற்று முதல் மற்றும் இரண்டாம் பாகம் நூல்களை துபாய் நகரின் பிரமாண்ட நூலகமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு, அன்பளிப்பாக வழங்கினார். இந்த நூல்களை நூலக அதிகாரி முஹம்மது பெற்றுக் கொண்டார்.
நேற்று உலக நூலக தினம் என்பதால் அதையொட்டி, துபாய் நகரில் மிக பிரம்மாண்டமான நூலகத் திருவிழா முகமது பின் ராஷித் நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமீரக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், கீழக்கரை முஹம்மது யாசின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது தமிழக வரலாற்றாசிரியர் அப்துல் றஸாக் அவர்கள் எழுதிய வரலாற்று நூல்களும் பரிசாக வழங்கியுள்ளார்.

இது குறித்து வரலாற்றாய்வாளர் ச.சி.நெ. அப்துல் றஸாக் கூறுகையில், துபாய் நகரின் ஆட்சியாளர் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் இத்தகைய பிரமாண்ட நூலகத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதில் தமிழ் நூல்களும் இடம் பெற வாய்ப்பளித்திருப்பதற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் மொழி தோட்டம் என்ற இடத்தை ஏற்படுத்தி அதில் ஆட்சியாளரின் பொன்மொழிகள் உலகின் பல்வேறு மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியும் இடம் பெற செய்திருப்பதன் மூலம் தமிழ் மொழிக்கு துபாய் நகரம் அளித்து வரும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள முடிகிறது என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Amma is not a word.. but Emotion: உயிரின் மறு வடிவம் அம்மா!!
My Proud Mother: சோர்வடையும் போதெல்லாம் தூக்கி விடும் உற்சாக பூஸ்டர்.. என் அம்மா!
அன்னையர் தினம்.. அவளுக்கு நீ கூறும் வாழ்த்துகள் சொல் அல்ல செயல்!
A letter to the Mother: தன்னலமற்ற தாயே.... தாய்க்கு ஒரு கடிதம்!
அன்பின் மறு உருவம் என் அன்னை!
Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!
அன்னை ஓர் அற்புதம்!
Mother's day Poem: அன்னை
828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!
{{comments.comment}}