சென்னை: தமிழ்புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில்
முதல்வர் முக ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பள்ளி மாணவர்களை பார்க்கும் போது என் இளமை திரும்புகிறது. ஒரு அரசியல் விழாவில் முப்பெரும் விழாக்கள் நடைபெறும். ஆனால், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஐம்பெரும் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம் என்று ஒருவரை பார்த்து நினைக்கக்கூடாது. கல்விதான் உண்மையான பெருமையான அடையாளம் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கான திட்டங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். தொடர்ந்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீட் போன்ற மோசடிகளை எதிர்க்கிறோம். அதற்கு ஒரு நாள் முடிவு கட்டுவோம். நீட் தேர்வு மோசடி என்று முதன்முதலில் கூறியது தமிழ்நாடு தான். தற்பொழுது ஒட்டு மொத்த நாடும் கூறுகிறது.
காலை உணவு திட்டமும் விரிவாக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 25 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெருகின்றனர்.போதைப் பொருள் நடமாட்டம் என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல சமூக ஒழுங்கு பிரச்சனை. போதைப்பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அரசு பள்ளிகள் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.
புதுமைப்பெண் திட்டத்தை பலரும் பாராட்டுகின்றனர். அதே போல தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது.இந்த திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும்.இந்த தொகை இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை வழங்கப்படும்.
உலக அளவில் சவால் விடும் வகையில் தமிழ் மாணவர்கள் வளர வேண்டும் என்பது என்ன ஆசை. காலை உணவு திட்டம் மூலம் 16 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். பள்ளிகளில் 21,000 ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. அதில், 600 ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. படிங்க படிச்சுக்கிட்டே இருங்க படிப்பு ஒன்று தான் யாராலும் பறிக்க முடியாது. அறிவியல் வளர்ச்சி அதிகரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி பேசுபொருள் ஆகி உள்ளது என்றார் அவர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}