சென்னை: டிடி தமிழ் நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்தில் குளறுபடி செய்தமைக்காக மன்னிப்பு கேட்டுள்ளது டிடி தமிழ் நிறுவனம்.
சென்னை தொலைக்காட்சியான டிடி தமிழ் நிறுவனத்தில் இன்று இந்தி மாத நிறைவு விழா நடைபெற்றது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டார். அப்போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 3வது வரியை முழுமையாக பாடாமல் விட்டு விட்டு அடுத்த வரியைப் பாடியுள்ளனர் பாடலைப் பாடியவர்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் தமிழிசையும் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டிடி தமிழ் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தி மாத நிறைவு விழா மற்றும் தூர்தர்ஷன் சென்னையின் பொன் விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பித்தார். விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, தவறுதலாக ஒரு வரி விடுபட்டு விட்டது. கவனச் சிதறல் காரணமாக ஏற்பட்ட தவறு இது. இந்தத் தவறுக்கு மன்னிப்பு கோரிக் கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ்த் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடல் பாடியவர்களிடம் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!
முக ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது... நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டார்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
{{comments.comment}}