கூடியது தமிழ்நாடு சட்டசபை.. நடப்பாண்டின் இறுதிக் கூட்டம்.. மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி

Dec 09, 2024,11:01 AM IST

சென்னை: நடபாண்டின் இறுதி சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்துடன் தொடங்கியது.


2024-25 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் 19ஆம் தேதி பொது பட்ஜெட்டும், இருபதாம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு அடுத்த இரண்டு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் 29ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவடைந்தது. விதிகளின்படி அடுத்த ஆறு மாதத்திற்குள் சட்டமன்றம் கூட வேண்டும் என்ற அடிப்படையில்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. 




சட்டசபை இன்று காலை கூடியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது.  காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கியதும், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, முரசொலி நாளிதழின் நிர்வாக  ஆசிரியர் முரசொலி செல்வம், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து 2023- 24 ஆம் ஆண்டுக்கான துணை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். பின்னர் முதல்வர் மு க ஸ்டாலின் தனித் தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளார். 


மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்