சென்னை: நடபாண்டின் இறுதி சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்துடன் தொடங்கியது.
2024-25 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் 19ஆம் தேதி பொது பட்ஜெட்டும், இருபதாம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு அடுத்த இரண்டு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் 29ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவடைந்தது. விதிகளின்படி அடுத்த ஆறு மாதத்திற்குள் சட்டமன்றம் கூட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

சட்டசபை இன்று காலை கூடியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கியதும், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2023- 24 ஆம் ஆண்டுக்கான துணை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். பின்னர் முதல்வர் மு க ஸ்டாலின் தனித் தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}