சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலேயே நிலவ கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் தற்போது முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வெயில் சீசன் தூங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்தால் ஏப்ரல் மே மாதங்களில் கொடூரமாக வெயிலின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வட தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவினாலும் கூட பிற்பகலுக்குப் பிறகு வெயில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு அதாவது இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிகக்கூடும். ஒரு சில இடங்களில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
14.2.25 முதல் 17.2.25 வரை தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும்.
சென்னை வானிலை:
சென்னையில் இன்று அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கக்கூடும்.
13.2.25 தேதி நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்
சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு
ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்
Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!
Tamil Poem: மாயவலை
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
{{comments.comment}}