சென்னை: மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை விடாமல் பெய்து வருவதால், இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த மாவட்டங்களின் நிலைமை படு மோசமாக இருப்பதால் நாளையும் பொது விடுமுறை விடப்படுகிறது.
மிச்சாங் புயல் மிக மோசமான பாதிப்பை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையிலும் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த சென்னையும் விடாமல் பெய்து வரும் மழையில் மிதக்கிறது. வரலாறு காணாத மழைப்பொழிவை மிச்சாங் புயல் ஏற்படுத்தி விட்டது.
சென்னை மாநகரிலும், அதன் புறநகர்களிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாளையும் அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. கல்வி நிறுவனகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் சென்னை நகரின் பல பகுதிகளிலும் வெள்ளத்தில் மிதக்கின்றன. கார்கள் வெள்ள நீரில் மிதப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது. கிட்டத்தட்ட 2015ம் ஆண்டு வந்த வெள்ள பாதிப்பு போலவே இப்போதும் அதிக பாதிப்பை சென்னை மற்றும் புறநகர்கள் சந்தித்துள்ளன.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}