சென்னை : மத்திய அரசு காகங்களில் தீவிரமான H5N1 பறவைக் காய்ச்சல் பரவலை உறுதி செய்ததைத் தொடர்ந்து, தமிழக கால்நடை பராமரிப்புத் துறை மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சென்னையின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக காகங்கள் உயிரிழப்பதை அதிகரித்து வருகிறது. ஜனவரி 21, 2026 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட காகங்களின் மாதிரிகளில் H5N1 வைரஸ் இருப்பதை போபாலில் உள்ள ஆய்வுக்கூடம் (ICAR-NIHSAD) உறுதி செய்துள்ளது. இது குறித்து மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.

பறவைகள் இறப்பு பதிவாகும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கவும், உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்த பறவைகளை முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆழமாகப் புதைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கையுறைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இறந்த பறவைகளைத் தொடவோ அல்லது உடற்கூறு ஆய்வு செய்யவோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கோழிப் பண்ணைகள், வாத்து வளர்ப்பு இடங்கள் மற்றும் இறைச்சிக் கூடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வனத்துறையினர் வனப்பகுதிகளில் உள்ள பறவைகளைக் கண்காணிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், 'ஒரே ஆரோக்கியம்' (One Health) என்ற அடிப்படையில் கால்நடை, சுகாதாரம் மற்றும் வனத்துறை இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் பறவைகள் ஏதேனும் அசாதாரணமாக உயிரிழந்தால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}