சென்னை: தென் கொரியாவில் இன்று தொடங்கிய ஆசிய தடகளப் போட்டியில், ஆடவருக்கான 20 மீட்டர் நடைப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தென் கொரியாவில் 26 ஆவது ஆசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்கியது. இந்தப் போட்டிகள் இன்று தொடங்கி, வரும் மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாக இந்த தொடரில் 64 பேர் கொண்ட வீரர் வீராங்கனைகள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இதில் பிரவீன் சித்ரவேல், செர்வின் செபாஸ்டியன், தமிழரசு, ராகுல் குமார், விஷால், சந்தோஷ் குமார், வித்யா ராம்ராஜ் , அபிநயா, சுபா வெங்கடேசன் என தமிழகத்தைச் சேர்ந்த 9 வீரர்கள் அடங்குவர்.

இந்த நிலையில் இன்று தொடங்கிய ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின், முதல் போட்டி ஆடவருக்கான 20 மீட்டர் நடைப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன், இந்திய வீரர் அமித், சீனாவைச் சேர்ந்த வாங்க் உள்ளிட்ட 15 வீரர்கள் பங்கேற்றனர். சரியாக உள்ளூர் நேரப்படி காலை 4:30 மணியளவில் தொடங்கிய முதல் போட்டியிலேயே, ஒரு மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் 20 கிலோ மீட்டர் இலக்கை கடந்து தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் வெண்கலம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாகும்.
அதேபோல் இந்திய வீரரான அமித் ஐந்தாவது இடத்தை பெற்றார்.
தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன் ஏற்கனவே 2022 மற்றும் 23 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். 2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் நான்காவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}