முதல் போட்டியிலேயே இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று.. தமிழக வீரர் செர்வின் அசத்தல்..!

May 27, 2025,06:01 PM IST

சென்னை: தென் கொரியாவில் இன்று தொடங்கிய ஆசிய தடகளப் போட்டியில், ஆடவருக்கான 20 மீட்டர் நடைப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.



தென் கொரியாவில் 26 ஆவது ஆசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்கியது. இந்தப் போட்டிகள் இன்று தொடங்கி, வரும் மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாக இந்த தொடரில் 64 பேர் கொண்ட வீரர் வீராங்கனைகள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இதில் பிரவீன் சித்ரவேல், செர்வின் செபாஸ்டியன், தமிழரசு, ராகுல் குமார், விஷால், சந்தோஷ் குமார், வித்யா ராம்ராஜ் , அபிநயா, சுபா வெங்கடேசன் என தமிழகத்தைச் சேர்ந்த 9 வீரர்கள் அடங்குவர்.




இந்த நிலையில் இன்று தொடங்கிய ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின், முதல் போட்டி ஆடவருக்கான 20 மீட்டர் நடைப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன், இந்திய வீரர்  அமித், சீனாவைச் சேர்ந்த வாங்க் உள்ளிட்ட 15 வீரர்கள் பங்கேற்றனர். சரியாக உள்ளூர் நேரப்படி காலை 4:30 மணியளவில் தொடங்கிய முதல் போட்டியிலேயே, ஒரு மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் 20 கிலோ மீட்டர் இலக்கை கடந்து தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் வெண்கலம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாகும்.

அதேபோல் இந்திய வீரரான அமித் ஐந்தாவது இடத்தை பெற்றார்.


தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன் ஏற்கனவே 2022 மற்றும் 23 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். 2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் நான்காவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!

news

ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!

news

RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்

news

ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)

அதிகம் பார்க்கும் செய்திகள்