சென்னை: வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை முழுவதும் நேற்று முன்தினம் மிக கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்தது. இது தவிர தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து நேற்று தான் கரையை கடந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி, வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 20ஆம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளது. இந்த சுழற்சியின் காரணமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வரும் அக்டோபர் 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாம். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என கணித்துள்ளது.
இன்று மழை:
தமிழ்நாட்டில் சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் திருப்பூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கேரளா மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகள், கர்நாடகாவில் ஓரளவுக்கு பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது . அதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில்
அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது பிற்பகல் 1 மணி வரையிலான காலகட்டத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}