அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்கள், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?

Oct 18, 2024,10:59 AM IST

சென்னை:   வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை முழுவதும் நேற்று முன்தினம் மிக கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்தது. இது தவிர தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து நேற்று தான் கரையை கடந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.




அதன்படி, வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 20ஆம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளது. இந்த  சுழற்சியின் காரணமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வரும் அக்டோபர் 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாம். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு  வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என கணித்துள்ளது. 

 

இன்று  மழை: 


தமிழ்நாட்டில்  சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் திருப்பூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய  வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 


கேரளா மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகள், கர்நாடகாவில் ஓரளவுக்கு பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது . அதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


அடுத்த 3 மணி நேரத்தில்


அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது பிற்பகல் 1 மணி வரையிலான காலகட்டத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்