காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்து விட்டது.. படிப்படியாக கன மழை குறையும்.. வானிலை மையம்

Nov 13, 2024,05:43 PM IST
சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நீடித்து வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக-இலங்கை கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் வடக்கடலோரப்  பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் வரும்  நவம்பர் 16ஆம் தேதி வரை கன மழை பெய்யக்கூடும் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.



அதன்படி, தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வட தமிழ்நாட்டை ஒட்டி மையம் கொண்டிருந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. 

இந்த நிலையில் வட தமிழகத்தை ஒட்டி நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில் வரும் நாட்களில் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும்.

இது தவிர தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்