சென்னை: தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவ மழை படிப்படியாக தீவிரமடைந்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அனேக இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக நேற்று இரவு சென்னை திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு நல்ல மழை பெய்தது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வேளாங்கண்ணி, சீர்காழி, மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளில் காலையில் வெயில் அடித்தாலும் மாலை இரவு நேரங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
சென்னை மழை:
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில்,
இன்று அதிகாலை 6:00 மணிக்கு தொடங்கிய மழை தற்போது வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. அடையாறு, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தவெளி, அண்ணா சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளுகுளுவென இதமான சூழல் நிலவி வருகிறது.
ஒரு சில இடங்களில் வானவிலும் தென்பட்டதால் மக்கள் அதனை ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கன மழை:
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை...தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த சென்னை வானிலை மையம
நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?: அண்ணாமலை கேள்வி
மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் நிதி வழங்க வேண்டும்: சீமான்!
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது.. ஏன்னா.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. 85வது இடத்திற்கு இறங்கியது இந்தியா.. நம்பர் 1 யார் தெரியுமா?
வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!
பாதுகாப்பான தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு
ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்.. நான் கடைக்கு போயி சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்
{{comments.comment}}