சென்னை: தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவ மழை படிப்படியாக தீவிரமடைந்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அனேக இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக நேற்று இரவு சென்னை திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு நல்ல மழை பெய்தது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வேளாங்கண்ணி, சீர்காழி, மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளில் காலையில் வெயில் அடித்தாலும் மாலை இரவு நேரங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
சென்னை மழை:
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில்,
இன்று அதிகாலை 6:00 மணிக்கு தொடங்கிய மழை தற்போது வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. அடையாறு, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தவெளி, அண்ணா சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளுகுளுவென இதமான சூழல் நிலவி வருகிறது.
ஒரு சில இடங்களில் வானவிலும் தென்பட்டதால் மக்கள் அதனை ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கன மழை:
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானை அதிர வைத்த உமர்ஷா மரணம்.. வெறும் 15 வயதுதான்.. மாரடைப்பால் நடந்த பரிதாபம்!
Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!
புரட்டாசி மாதம் வருகிறது.. செப்டம்பர் 17ம் தேதி முதல்.. பெருமாளுக்குரிய விசேஷ மாதம்!
தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை
வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}