மீண்டும் மழை பெய்யப் போகுது.. அடுத்த 2 நாட்களில் பருவ மழை தீவிரமடையும்.. தமிழ்நாடு வெதர்மேன்

Nov 06, 2024,05:34 PM IST

சென்னை: சென்னையில் இன்று முதல் மீண்டும் வடகிழக்குப் பருவமழை வேகம் பிடிக்கும். படிப்படியாக தீவிரமடைந்து, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் மழை நல்ல பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தெற்கு வங்க கடலின் மத்திய கடற்கரை பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.



இதற்கிடையே வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், சென்னையில் இருந்து தொடங்கும் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரித்து, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தீவிரமடையும் என தமிழ்நாடு வெதர்மேன் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, இன்று காலை முதல் சென்னையில் இருந்து டெல்டா வரையிலான கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.பின்னர் படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரித்து ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், சென்னை, புதுச்சேரி, கடலூர் முதல் ராமேஸ்வரம் போன்ற கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்.  அப்போது இந்த பருவமழை தென் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை  முதல் அதிரடியாக மழை பெய்யக்கூடும்.

அதேபோல் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.  

வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மற்றும் துட்டி கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யும்.சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.   சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதால் உங்கள் குடை மற்றும் ரெயின்கோட் தவறாமல் எடுத்துச் செல்லுங்கள் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

news

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்

news

Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு

news

வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

news

வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!

news

சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்