24 மணி நேரத்தில்.. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெறும்

Dec 09, 2024,10:00 AM IST

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். பின்னர் டிசம்பர் 11ஆம் தேதி வாக்கில்  தமிழக இலங்கை கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும் .இதனால் தமிழகத்தில் அனேக இடங்களில் நாளை முதல் நான்கு நாட்கள் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் வடக்கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


புயலாக மாற வாய்ப்பில்லை




இதற்கிடையே, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்ற கேள்வி மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலு இல்லாமல் காணப்படுவதால் புயல் உருவாக வாய்ப்பு என்பது மிக  குறைவு என்று கணிக்கப்பட்டுள்ளது.


இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து இலங்கை வடகிழக்கு பகுதியில் வரும்போது தான் நமக்கு மழை துவங்க ஆரம்பிக்கும். அதன் பிறகு மேற்கு நோக்கி தமிழகத்தை நோக்கி நகரும்போது  செவ்வாய், புதன், வியாழன், ஆகிய மூன்று தினங்களில் தமிழாக கடலோரப் பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். மேலும் இது தெற்கு நோக்கி நகரக்கூடும் என்பதால் வெள்ளிக்கிழமை தென் தமிழகப் பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக வடக்கடலோர பகுதிகளான சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும். என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் கூட இது புயலாக மாற வாய்ப்பு மிக குறைவு என்றே குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், நல்ல மழை இருக்கும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரும் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் 4 நாட்கள் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் பேரிடர் மேலாண்மை  துறை அறிவுறுத்தி உள்ளது.மேலும் முறையான வழிகாட்டு விதிமுறைகளின்படி, பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதே சமயத்தில் ஏதாவது எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனடியாக பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மை குழு தலைவர் ராஜேஷ் லக்கானி அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.


அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தக்க ஏற்பாடுகளை செய்ய மாவட்ட ஆட்சியாளர், சென்னை மாநகராட்சி ஆணையாளருக்கு  அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?

news

ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?

news

மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!

news

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா

news

10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்

news

10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!

news

10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!

news

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931

news

The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்