சென்னை: வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகவே விட்டுவிட்டு கன முதல் மிதமான மழை வரை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த மழை தற்போதும் நீடித்து வருகிறது.
கிண்டி, அடையாறு, பட்டினப்பாக்கம், மெரினா, மந்தவெளி, மயிலாப்பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை காணப்பட்டது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்துள்ளது.

வட கடலோர மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் தென் மாவட்ட பகுதிகளில் பனி குறைந்தது மிதமான வெயிலுடன் வெக்கை நிலவி வருகிறது.
இதற்கிடையே தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவு வருகிறது.இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் ஆந்திராவில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}