வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

Nov 23, 2024,05:39 PM IST

சென்னை:தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவானது. இதனால் நாளை மறுநாள் முதல் நான்கு நாட்கள் தமிழக கடலோரப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் வரும் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



அதன்படி, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது தமிழ்நாடு- இலங்கை கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும்.இதன் காரணமாக  நாளை மறுநாள் முதல் நான்கு நாட்கள் தமிழக கடலோரப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட மூன்று சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அதேசமயம் சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட மூன்று சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் நாகை கடலோரப் பகுதி மீனவர்கள் அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி

news

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு

news

"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி

news

அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்

news

வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)

news

ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு

news

Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!

news

ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!

news

2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!

அதிகம் பார்க்கும் செய்திகள்