வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

Nov 23, 2024,05:39 PM IST

சென்னை:தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவானது. இதனால் நாளை மறுநாள் முதல் நான்கு நாட்கள் தமிழக கடலோரப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் வரும் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



அதன்படி, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது தமிழ்நாடு- இலங்கை கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும்.இதன் காரணமாக  நாளை மறுநாள் முதல் நான்கு நாட்கள் தமிழக கடலோரப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட மூன்று சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அதேசமயம் சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட மூன்று சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் நாகை கடலோரப் பகுதி மீனவர்கள் அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!

news

கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!

news

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

news

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!

news

வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்

news

பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்

news

எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்