சென்னை: வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்கனவே உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதீத கனமழை வெளுத்து வாங்கியது.இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், முக்கிய சாலைகள்,விவசாய நிலங்கள், நெசவுத்தொழில் என கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தப் புயல் சேதங்களை சீர்படுத்த முடியாமல் மக்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இருப்பினும் மழைநீர் தேங்கிய பல இடங்களில் பழைய நிலைமை மீண்டும் திரும்பி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த புயல் சேதங்களை சீர்படுத்த தற்போது வரை தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் நாளை மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட கூடுதலாக 18 சதவீதம் பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட கூடுதலாக 20 சதவீதம் பெய்துள்ளது.
வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து டிசம்பர் 12ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து தமிழக இலங்கை கடலோரப் பகுதிகளில் கரையை கடக்க கூடும்.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்பதால் இரண்டு நாட்கள் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திராவிலும் டிசம்பர் 12ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ரசிகர்களே.. உங்களது அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.. அஜீத் குமார்நெகிழ்ச்சி!
ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி
இயற்பெயர்களுக்கு திரும்பும் முன்னணி நடிகர்கள்... தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட்.. அப்போ ரஜினி?
தமிழ்நாடு முழுவதும் களை கட்டிய பொங்கல் திருநாள்.. வீடுகள் தோறும் Happy Pongalo Pongal!
சீறிப் பாயும் காளைகள்.. விறுவிறு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. பொங்கல் நாளில் கோலாகலம்!
பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!
மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பொங்கல் வைக்கும் நேரத்தில் நாளை மழை பெய்யுமா.. என்ன சொல்கிறது வானிலை மையம்?
மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
{{comments.comment}}