சென்னை: தமிழ்நாட்டில் மேற்கு, தெற்கு மற்றும் உள்புற பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் , அடுத்த சில நாட்களில் வெப்பநிலை குறையக் கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் மார்ச் 25ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் புழுக்கம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெயில் சற்று குறைய கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வளிமண்டல மேலடுக்கு தாழி கீழே இறங்குவதால் தமிழ்நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் உட்புறப் பகுதிகளில் மழை பெய்யும். இதனால் தமிழ்நாட்டின் உட்புறம் மற்றும் தெற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் வெப்பநிலையில் சிறிது குறைவு காணப்படும்.
கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை தொடர்ந்து ஈரப்பதமாக இருக்கும், வெப்பநிலை சுமார் 33-35 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். பெங்களூருவிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து இடியுடன் கூடிய நல்ல மழை பெய்யும் என கூறியுள்ளார்.
லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து
அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்
கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!
தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?
இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்
ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?
வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு
ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு
{{comments.comment}}