சென்னை: தமிழ்நாட்டில் மேற்கு, தெற்கு மற்றும் உள்புற பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் , அடுத்த சில நாட்களில் வெப்பநிலை குறையக் கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் மார்ச் 25ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் புழுக்கம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெயில் சற்று குறைய கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வளிமண்டல மேலடுக்கு தாழி கீழே இறங்குவதால் தமிழ்நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் உட்புறப் பகுதிகளில் மழை பெய்யும். இதனால் தமிழ்நாட்டின் உட்புறம் மற்றும் தெற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் வெப்பநிலையில் சிறிது குறைவு காணப்படும்.
கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை தொடர்ந்து ஈரப்பதமாக இருக்கும், வெப்பநிலை சுமார் 33-35 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். பெங்களூருவிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து இடியுடன் கூடிய நல்ல மழை பெய்யும் என கூறியுள்ளார்.
பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்
திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை
நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்
{{comments.comment}}