தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு.. அடுத்த சில நாட்களில் வெப்பநிலை குறையும்.. தமிழ்நாடு வெதர்மேன்

Mar 22, 2025,05:05 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மேற்கு, தெற்கு மற்றும் உள்புற பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் , அடுத்த சில நாட்களில் வெப்பநிலை குறையக் கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.


தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் மார்ச் 25ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்  கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் புழுக்கம் அதிகரித்துள்ளது.




இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெயில் சற்று குறைய கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வளிமண்டல மேலடுக்கு தாழி கீழே இறங்குவதால் தமிழ்நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் உட்புறப் பகுதிகளில் மழை பெய்யும். இதனால் தமிழ்நாட்டின் உட்புறம் மற்றும் தெற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் வெப்பநிலையில் சிறிது குறைவு காணப்படும்.


கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


சென்னை தொடர்ந்து ஈரப்பதமாக இருக்கும், வெப்பநிலை சுமார் 33-35 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். பெங்களூருவிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து இடியுடன் கூடிய நல்ல மழை பெய்யும் என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்