சென்னை: தமிழ்நாட்டில் மேற்கு, தெற்கு மற்றும் உள்புற பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் , அடுத்த சில நாட்களில் வெப்பநிலை குறையக் கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் மார்ச் 25ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் புழுக்கம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெயில் சற்று குறைய கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வளிமண்டல மேலடுக்கு தாழி கீழே இறங்குவதால் தமிழ்நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் உட்புறப் பகுதிகளில் மழை பெய்யும். இதனால் தமிழ்நாட்டின் உட்புறம் மற்றும் தெற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் வெப்பநிலையில் சிறிது குறைவு காணப்படும்.
கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை தொடர்ந்து ஈரப்பதமாக இருக்கும், வெப்பநிலை சுமார் 33-35 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். பெங்களூருவிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து இடியுடன் கூடிய நல்ல மழை பெய்யும் என கூறியுள்ளார்.
கோவை, நீலகிரிக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
கட்ட பஞ்சாயத்து செய்யவா மக்கள் ஓட்டு போட்டார்கள்? பூவை ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
ஐபிஎல் லைட்டை நாங்கதான் ஹேக் பண்ணோம் தெரியுமா.. காமெடி செய்த பாகிஸ்தான் அமைச்சர்!
ரஜினிகாந்த், விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா? தவாக தலைவர் வேல்முருகன்
2026ல் தொடங்குகிறது சென்சஸ் கணக்கெடுப்பு.. முதலில் லடாக், காஷ்மீரில் தொடங்கும்.. மத்திய அரசு
பாமகவின் இரு தலைவர்களும் பேச வேண்டும்: பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி
தமிழ்நாட்டை கத்தி.. அரிவாள்.. துப்பாக்கி பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி
இஸ்ரேல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால்.. எங்களுக்காக பாகிஸ்தான் பதில் தரும்.. ஈரான்
இஸ்ரேலுக்கு முழுமையான பதிலடி தருவோம்.. அதுவரைக்கும் போர் நிறுத்தம் கிடையாது.. ஈரான் அறிவிப்பு
{{comments.comment}}