சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்றும் மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை சதத்தை தாண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
.jpg)
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதே போலத்தான் இன்னும் பத்து நாளைக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று மட்டும் சென்னை, வேலூர், சேலம், கரூர், ஈரோடு, திருப்பத்தூர், திருத்தணி, மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் வெயில் சதம் அடித்தது. குறிப்பாக வேலூரில் அதிகமட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை மற்றும் சென்னை மீனம்பாக்கத்தில் 101.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார். அதன்படி
தமிழ்நாட்டிற்கு இன்னொரு மோசமான நாள் இன்று.வேலூரில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்த நிலையில் ,மீண்டும் இன்றும் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மீனம்பாக்கத்திலும் அதிகபட்சமாக 101.6 டிகிரி பதிவாகும்.
அதே நேரத்தில் சென்னை புறநகர்ப் பகுதிகளில் 102.2 டிகிரி ஃபாரிஹீட்டை ஐ நெருங்கலாம்.
மதுரையில் சுமார் 102.2°பாரன்ஹீட்டும், சேலத்தில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டும். கரூர் மற்றும் ஈரோட்டில் 102.2° பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை சதத்தை தாண்டி இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
{{comments.comment}}