சென்னை: காரைக்கால், நாகை, வேதாரண்யம், ராமேஸ்வரம் பகுதிகளில் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய மழை காலை 10 மணி வரை மிதமான மழையாகவே பெய்து வந்தது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று எந்த எந்த மாவட்டங்களில் மிக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ய கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி காரைக்கால், நாகை, வேதாரண்யம், ராமேஸ்வரம் பெல்ட்கள் போன்ற பகுதிகளில் இன்று அதிகமான மழையை எதிர்பார்க்கலாம். வேதாரண்யம் முதல் ராமேஸ்வரம் வரை பலத்த மழை பெய்யும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று நல்ல மழை பதிவாகி உள்ளது. மற்றபடி மழை விட்டு விட்டு தொடரும். வழக்கமான பருவ மழையாகவே இது இருக்கும். எனவே இதனை ஜாலியாக என்ஜாய் பண்ணுங்க என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் .
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவ., 29ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் தகவல்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு.. ஜனாதிபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார்
சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம்: அன்புமணி ராமதாஸ்!
INS Mahe.. இந்தியாவின் சைலென்ட் ஹண்டர் மும்பையில் களமிறங்கியது!
அதிர வைத்த தேஜஸ் போர் விமான விபத்து.. நடந்த தவறு என்ன.. தீவிரமாக ஆராயும் நிபுணர்கள்
கருப்பு வெள்ளை இந்திப் படங்களின் ஸ்டைலிஷான நாயகன்.. மறக்க முடியாத தர்மேந்திரா
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்.. மும்பையில் உயிர் பிரிந்தது
சென்னையில்.. தக்காளி விக்கிற விலைக்கு.. சட்னி அரைக்க முடியாது போலயே.. கிலோ ரூ. 80!
ரஜினிகாந்த்தை திருப்திப்படுத்தப் போவது யார்.. தலைவர் 173 எதிர்காலம் என்னாகும்?
{{comments.comment}}