சென்னை: காரைக்கால், நாகை, வேதாரண்யம், ராமேஸ்வரம் பகுதிகளில் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய மழை காலை 10 மணி வரை மிதமான மழையாகவே பெய்து வந்தது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று எந்த எந்த மாவட்டங்களில் மிக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ய கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி காரைக்கால், நாகை, வேதாரண்யம், ராமேஸ்வரம் பெல்ட்கள் போன்ற பகுதிகளில் இன்று அதிகமான மழையை எதிர்பார்க்கலாம். வேதாரண்யம் முதல் ராமேஸ்வரம் வரை பலத்த மழை பெய்யும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று நல்ல மழை பதிவாகி உள்ளது. மற்றபடி மழை விட்டு விட்டு தொடரும். வழக்கமான பருவ மழையாகவே இது இருக்கும். எனவே இதனை ஜாலியாக என்ஜாய் பண்ணுங்க என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் .
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}