சென்னை: காரைக்கால், நாகை, வேதாரண்யம், ராமேஸ்வரம் பகுதிகளில் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய மழை காலை 10 மணி வரை மிதமான மழையாகவே பெய்து வந்தது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று எந்த எந்த மாவட்டங்களில் மிக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ய கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி காரைக்கால், நாகை, வேதாரண்யம், ராமேஸ்வரம் பெல்ட்கள் போன்ற பகுதிகளில் இன்று அதிகமான மழையை எதிர்பார்க்கலாம். வேதாரண்யம் முதல் ராமேஸ்வரம் வரை பலத்த மழை பெய்யும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று நல்ல மழை பதிவாகி உள்ளது. மற்றபடி மழை விட்டு விட்டு தொடரும். வழக்கமான பருவ மழையாகவே இது இருக்கும். எனவே இதனை ஜாலியாக என்ஜாய் பண்ணுங்க என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் .
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!
நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்
தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!
கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!
2026ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
விஜய்யுடன் கை கோர்த்த செங்கோட்டையன்.. அதிமுகவுக்கு குட்பை சொன்ன தவெக!
செங்கோட்டையன் பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை...எடப்பாடி பழனிச்சாமி பதில்
உருவானது டித்வா புயல்...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
108 ஆம்புலன்ஸ் அவசர எண் மாற்றம் - புதிய எண்கள் அறிவிப்பு.. மக்களே நோட் பண்ணிக்குங்க!
{{comments.comment}}