தமிழ்நாட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்த மழை.. இன்றும், நாளையும் பரவலாக மழை.. தமிழ்நாடு வெதர்மேன்!

Mar 11, 2025,05:18 PM IST

சென்னை: தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்றும் நாளையும் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் , சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் ஓரளவு  மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.


பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் குளுமையான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். 


இந்த நிலையில் தமிழகத்திற்கு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 


கடந்த ஆண்டைப் போல கோடை காலங்களில் முற்றிலும் வறண்டு போகாமல் மழை பெய்து வருவது இதன் தனிச்சிறப்பு. ஏனெனில் கடந்த ஜனவரி மாதம் 13 மற்றும் 15 தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட தமிழகம், டெல்டா பகுதிகள் மற்றும் தெற்கு தமிழகப் பகுதிகளில் கனமழை பெய்தது. அதேபோல் ஜனவரி 18, 19 தேதிகளில் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென் தமிழகப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் லேசான மழையும், பிப்ரவரி 28 முதல் மார்ச் 1 வரை டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் கனமழையும் பதிவாகி இருந்தது.


இந்த நிலையில் தற்போது மார்ச் 11 மற்றும் 12 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம்.


சென்னை மழை: 




இன்றும் நாளையும் தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரளவு மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, முதல் வேலூர் பெல்ட் வரை மதியம் முதல் இரவு வரை ஓரளவு மழை பெய்யும். இதனால் உங்கள் ரெயின் கோட் மற்றும் குடையை எடுத்துச் செல்லுங்கள்.. 


கனமழை:


தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரிக்கும். நீர்வீழ்ச்சிகளில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மூடு அளவிற்கு மழைக்கு வாய்ப்புள்ளது.


கோவை, நீலகிரி, திருப்பூர், உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் மற்ற உள் பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கூர்மையான மழையும் பெய்யக்கூடும்.


தமிழக முழுவதும் ஒட்டுமொத்தமாக வெப்பநிலை மிகவும் நன்றாக இருக்கும். இந்த இரண்டு நாட்கள் வெப்பம் இல்லாமல் குளுமையான சூழலை மகிழுங்கள் என பதிவிட்டுள்ளார்‌.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்

news

திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

news

Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை

news

நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!

news

அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ

news

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

news

நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்

news

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்