சென்னை: தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்றும் நாளையும் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் , சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் ஓரளவு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் குளுமையான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்திற்கு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி
கடந்த ஆண்டைப் போல கோடை காலங்களில் முற்றிலும் வறண்டு போகாமல் மழை பெய்து வருவது இதன் தனிச்சிறப்பு. ஏனெனில் கடந்த ஜனவரி மாதம் 13 மற்றும் 15 தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட தமிழகம், டெல்டா பகுதிகள் மற்றும் தெற்கு தமிழகப் பகுதிகளில் கனமழை பெய்தது. அதேபோல் ஜனவரி 18, 19 தேதிகளில் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென் தமிழகப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் லேசான மழையும், பிப்ரவரி 28 முதல் மார்ச் 1 வரை டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் கனமழையும் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது மார்ச் 11 மற்றும் 12 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
சென்னை மழை:

இன்றும் நாளையும் தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரளவு மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, முதல் வேலூர் பெல்ட் வரை மதியம் முதல் இரவு வரை ஓரளவு மழை பெய்யும். இதனால் உங்கள் ரெயின் கோட் மற்றும் குடையை எடுத்துச் செல்லுங்கள்..
கனமழை:
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரிக்கும். நீர்வீழ்ச்சிகளில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மூடு அளவிற்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர், உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் மற்ற உள் பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கூர்மையான மழையும் பெய்யக்கூடும்.
தமிழக முழுவதும் ஒட்டுமொத்தமாக வெப்பநிலை மிகவும் நன்றாக இருக்கும். இந்த இரண்டு நாட்கள் வெப்பம் இல்லாமல் குளுமையான சூழலை மகிழுங்கள் என பதிவிட்டுள்ளார்.
அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு.. முதல்வர் வசம் இந்தத் துறைகள்.. மற்றவர்களுக்கு என்ன துறை?
செய்தியாளர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் தயங்குவது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை .. நடிகர் ரவிமோகன் அறிவிப்பு
உண்மையே எப்போதும் வெல்லும். ரவி மோகனுக்கு உடனடியாக பதில் கொடுத்த ஆர்த்தி
உடல் ஆரோக்கியமே ஆகச்சிறந்த செல்வம்!
கேட்கிறதா.. உற்றுக்கேள் என் தமிழினமே.. இனப்படுகொலை மே 18 ...
சூர்யா - ஜோதிகாவின் ரூ.200 கோடி ஆடம்பர பங்களா பற்றி இதெல்லாம் தெரியுமா?
தில்லாலங்கடி!
வியர்வை
{{comments.comment}}