16ம் தேதி வரை .. கடலோர மாவட்டங்களில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

Nov 13, 2024,10:30 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் நவம்பர் 16ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும். அதேசமயம், இந்த மழை மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுமெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இதனால் டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் வடக்கடலோர  பகுதிகளான சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:


புதுச்சேரிக்கு நல்ல மழை




நேற்று இரவு முதல் கடலூர், பாண்டிச்சேரி, அரியலூர், மயிலாடுதுறை, போன்ற மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. வங்கக்கடலில் உருவான  காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது டெல்டா பகுதிகளுக்கு அருகில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றின் குவிப்பு அந்த பகுதிகளில் தொடர்ந்து நீடித்து வந்ததால் நேற்று கடலூர் பாண்டிச்சேரி போன்ற இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. 


தற்போது அப்பகுகளில் அடர்ந்த மேகங்கள் மேலும் நீடித்திருப்பதால் கடலூர், பாண்டிச்சேரி, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் மழை பெய்து வருகிறது. இதனை ஒட்டிய உள் மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று வட தமிழக பகுதிகளில் காற்றின் குவிப்பு இருந்ததால் அப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. 


தென் - உட்புற மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு


இந்த காற்றின் குவிப்பு இன்று உள் மாவட்டங்களில் நகர்ந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் மேற்கு நோக்கி நகரும்போது உள்பகுதிகளான கோயம்புத்தூர்,நீலகிரி, ஈரோடு, மற்றும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி, போன்ற மாவட்டங்களில் பரவலாக  மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. காற்றின் குவிப்பு எப்பொழுதெல்லாம் உள் மாவட்டங்களில் செல்கிறதோ அப்பொழுதெல்லாம் ஆங்காங்கே பெரிய மழையாக இல்லாமல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் நாளைக்குள் கனமழைக்கு  வாய்ப்புள்ளது. தமிழக உள் மாவட்டங்கள், கோவை ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் மாவட்டங்களில் கன மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையை பொருத்தவரை இன்று காலை நேரத்தில் மழைக்கு ஒரு பிரேக் இருக்கும். இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும். நாளை, நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு இல்லை. 50 மி.மீ,60 மில்லி மீட்டர் வரை கனமழை பெய்தால் கூட அந்த மழையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. 


இது போன்ற மழை இன்று இரவு முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை இரண்டு மூன்று நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பெய்யக்கூடும். இந்த மழை என்ஜாய் பண்ணக்கூடிய மழையாகவே இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்