சென்னை: வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்று மீண்டும் பலவீனமடைந்து கடலுக்குள்ளேயே சென்று விடுமாம். இதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே என தமிழ்நாடு வெதர்மேன் கிண்டலாக மழை நிலவரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் தற்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. மார்கழி மாதம் என்றால் குளிர் வாட்டி எடுக்கும் என்பது நியதி. ஆனால் தற்போது கடலோரப் பகுதிகளை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் வெப்ப சலனம் நிலவி வருகிறது.

இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று சென்னை உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை டிசம்பர் 23 முதல் மீண்டும் தீவிரமடைகிறது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிறிஸ்துமஸுக்குப் பிறகு வரும் டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் மீண்டும் நல்ல மழை பெய்யும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அங்குமிங்கும் சில நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும். பின்னர் மீண்டும் பலவீனமடைந்து கடலுக்குள்ளே சென்றுவிடும். மேற்கிலிருந்து வரும் காற்றும் இதை கடலுக்குள் தள்ளி விடும்.
இதையெல்லாம் பார்க்கும்போது இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடவுன்லேயே இருந்துருக்காலாமே என்று நீங்கள் நினைக்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் ஜாலியாக பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}