சென்னை: வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்று மீண்டும் பலவீனமடைந்து கடலுக்குள்ளேயே சென்று விடுமாம். இதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே என தமிழ்நாடு வெதர்மேன் கிண்டலாக மழை நிலவரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் தற்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. மார்கழி மாதம் என்றால் குளிர் வாட்டி எடுக்கும் என்பது நியதி. ஆனால் தற்போது கடலோரப் பகுதிகளை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் வெப்ப சலனம் நிலவி வருகிறது.
இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று சென்னை உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை டிசம்பர் 23 முதல் மீண்டும் தீவிரமடைகிறது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிறிஸ்துமஸுக்குப் பிறகு வரும் டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் மீண்டும் நல்ல மழை பெய்யும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அங்குமிங்கும் சில நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும். பின்னர் மீண்டும் பலவீனமடைந்து கடலுக்குள்ளே சென்றுவிடும். மேற்கிலிருந்து வரும் காற்றும் இதை கடலுக்குள் தள்ளி விடும்.
இதையெல்லாம் பார்க்கும்போது இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடவுன்லேயே இருந்துருக்காலாமே என்று நீங்கள் நினைக்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் ஜாலியாக பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}