சென்னை: வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்று மீண்டும் பலவீனமடைந்து கடலுக்குள்ளேயே சென்று விடுமாம். இதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே என தமிழ்நாடு வெதர்மேன் கிண்டலாக மழை நிலவரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் தற்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. மார்கழி மாதம் என்றால் குளிர் வாட்டி எடுக்கும் என்பது நியதி. ஆனால் தற்போது கடலோரப் பகுதிகளை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் வெப்ப சலனம் நிலவி வருகிறது.

இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று சென்னை உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை டிசம்பர் 23 முதல் மீண்டும் தீவிரமடைகிறது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிறிஸ்துமஸுக்குப் பிறகு வரும் டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் மீண்டும் நல்ல மழை பெய்யும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அங்குமிங்கும் சில நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும். பின்னர் மீண்டும் பலவீனமடைந்து கடலுக்குள்ளே சென்றுவிடும். மேற்கிலிருந்து வரும் காற்றும் இதை கடலுக்குள் தள்ளி விடும்.
இதையெல்லாம் பார்க்கும்போது இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடவுன்லேயே இருந்துருக்காலாமே என்று நீங்கள் நினைக்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் ஜாலியாக பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,
அச்சச்சோ.. ஆமாங்க இப்ப தாங்க வலிக்குது.. தங்கமே தங்கம்!
பராசக்திபட வெளியீட்டிற்கு தடை விதக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
ஜனநாயகன்: ஜனவரி 4 முதல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்
தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இல்லை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்!
வைகோ நடைபயணம்... திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடந்த 4 நாட்கள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு..சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
ஏறிக் கொண்ட போகும் தங்கம் விலை.. காரணம் என்ன.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதா?
{{comments.comment}}