சென்னையில் ரம்மியமான சூழல்.. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்.. 2 வாரம் கன மழை.. தமிழ்நாடு வெதர்மேன்

Jul 19, 2024,05:33 PM IST

சென்னை:   காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்னும் 10 முதல் 14 நாட்களுக்கு கனமழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று 40 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 


காவிரி ஆற்றில் நாளுக்கு நாள் நீரின் வரத்து அதிகரிப்பதால் நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால் ஒகேனக்கலில் நான்காவது நாளாக பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஏற்கனவே நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  கூறியதாவது, 


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்னும் 10 முதல் 14 நாட்களுக்கு வரை மழை தொடர வாய்ப்புள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடர வாய்ப்புள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். குறிப்பாக தல காவிரியில் இன்று 23 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கேஆர்எஸ் அணை ஓரிரு நாட்களில் திறக்கப்படும் என்று தெரிகிறது. அடுத்த வாரத்திறகுள் கர்நாடகத்தின் காவிரி அணைகளிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் வரை திறக்கப்பட வாய்ப்புள்ளது.


நீலகிரியில் மழை தொடரும்


நீலகிரியில் கன மழை தொடரும். குறிப்பாக அவலாஞ்சி, பந்தலூர், தேவலா, போர்த்திமுண்டு, அப்பர் பவானி, பார்சன் வேலி, வால்பாறை ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யும்.


காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை இருக்கும். தொடர்ந்து ரம்மியமான சூழல் சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களில் நிலவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்