தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

Apr 05, 2025,05:02 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் இதே நிலை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.


குமரி கடல் மற்றும்  அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்திலும், உள் மாவட்டங்களிலும், கனமழை பெய்து வருகிறது. விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் இல்லாமல் குளுமையான சூழல் நிலவுகிறது. நேற்று அதிகபட்சமாக திருப்பூரில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. ஆட்சியர் அலுவலகம், ஊத்துக்குளியில் தலா 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ‌ இதனால் சாலையில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.




இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று போலவே இன்றும் மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பில் அவர் கூறியதாவது,


கோவையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கனமழை:


தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் ஒருமுறை அமோக மழை பெய்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோயம்புத்தூரில் கனமழை பெய்தது. ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.


இன்றும் இதே நிலை தொடரும்.உள்நாடு மற்றும் தென் தமிழகத்திலும் மழை பெய்யும். 


இன்று கனமழை:


 தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளார் .

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நலம் காக்கும் ஸ்டாலின்.. உங்கள் குடும்பத்தின் நலன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

news

கவினும் நானும் உண்மையாக காதலித்தோம்... எங்க அப்பா அம்மாவுக்கு தொடர்பில்லை... சுபாஷினி விளக்கம்!

news

கிராமங்களில் உள்ள சிறு குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை: தமிழக அரசு!

news

அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும் - சீமான்!

news

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

news

மோடியா இந்த லேடியா என்று கேட்டு அதிர விட்டவர் ஜெயலலிதா.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஓபிஎஸ்!

news

மாலேகான் குண்டுவெடிப்பு.. பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்கூர் உட்பட 7 பேர் விடுதலை

news

பாஜக மாநில அளவிலான பதவியில் குஷ்பு.. விஜயதாரணிக்கு இந்த முறையும் பதவி இல்லை!

news

மத்திய அரசுக்கு நேற்று.. மாநில அரசுக்கு இன்று.. கண்டனத்திலும் பேலன்ஸ் செய்யும் ஓ.பி.எஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்