சென்னை: தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் இதே நிலை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்திலும், உள் மாவட்டங்களிலும், கனமழை பெய்து வருகிறது. விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் இல்லாமல் குளுமையான சூழல் நிலவுகிறது. நேற்று அதிகபட்சமாக திருப்பூரில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. ஆட்சியர் அலுவலகம், ஊத்துக்குளியில் தலா 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் சாலையில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று போலவே இன்றும் மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பில் அவர் கூறியதாவது,
கோவையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கனமழை:
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் ஒருமுறை அமோக மழை பெய்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோயம்புத்தூரில் கனமழை பெய்தது. ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இன்றும் இதே நிலை தொடரும்.உள்நாடு மற்றும் தென் தமிழகத்திலும் மழை பெய்யும்.
இன்று கனமழை:
தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளார் .
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
கல்லறை தேடுகிறது!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை குறைவு.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
Red Alert: மும்பை, தானேயில்.. வெளுத்து வாங்கும் கன மழை.. மக்களே உஷாரா இருங்க!
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
என் நினைவில் ஒரு காதல் அலை.. கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி (2)
உலகின் முன்னோடி முதலமைச்சர்கள் மூவர்.. சிவ அறஞானிகள்.. யார் என்று தெரியுமா?
{{comments.comment}}