சென்னை: தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் இதே நிலை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்திலும், உள் மாவட்டங்களிலும், கனமழை பெய்து வருகிறது. விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் இல்லாமல் குளுமையான சூழல் நிலவுகிறது. நேற்று அதிகபட்சமாக திருப்பூரில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. ஆட்சியர் அலுவலகம், ஊத்துக்குளியில் தலா 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் சாலையில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று போலவே இன்றும் மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பில் அவர் கூறியதாவது,
கோவையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கனமழை:
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் ஒருமுறை அமோக மழை பெய்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோயம்புத்தூரில் கனமழை பெய்தது. ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இன்றும் இதே நிலை தொடரும்.உள்நாடு மற்றும் தென் தமிழகத்திலும் மழை பெய்யும்.
இன்று கனமழை:
தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளார் .
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}