- மஞ்சுளா தேவி
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே 4 மற்றும் 7 ஆம் தேதி மின்கட்டணம் செலுத்த அறிவித்திருந்த நிலையில் வரும் 18ஆம் தேதி வரை அபராத தொகையின்றி மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக என தமிழக அரசு அறிவித்துள்ளது.
டிசம்பர் 3ம் தேதியன்று வங்கக்கடலில் ஏற்பட்ட மிச்சாங் புயல் காரணமாக, சென்னை ,திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,ஆகிய நான்கு மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்தது . இப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து தீவு போலானது . இதனால் மக்கள் மின்சாரம், அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த மழை வெள்ளத்தில் பல்வேறு பொருட்கள் தண்ணீருக்கு இறையானது.பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்க தமிழக அரசு பல்வேறு மீட்பு நடவடிக்கைகளிலும், நிவாரண பணிகளிலும் ஈடுபட்டது.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடைசி தேதியாக 4.12.23 மற்றும் 7.12.23 ஆகிய தேதிகளில் அபராத தொகை இன்றி மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தி இருந்த நிலையில் , ஒரு சில பகுதிகளில் நிலைமையை இன்னும் சீரடையாமல் இருந்து வருகிறது.தற்போது பல்வேறு பகுதியை சேர்ந்த நலிவடைந்த மக்களால் மின்சார கட்டணத்தை கட்ட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த நான்கு மாவட்டங்களுக்கும் வரும் 18 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த அறிவிப்பு நான்கு மாவட்டங்களை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உட்பட அனைத்து நுகர்வோருக்கும் பொருந்தும் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}