சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்.. மின் கட்டணம் செலுத்த ..18ஆம் தேதி வரை டைம்!

Dec 13, 2023,01:19 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே 4 மற்றும் 7 ஆம் தேதி மின்கட்டணம் செலுத்த அறிவித்திருந்த நிலையில் வரும் 18ஆம் தேதி வரை அபராத தொகையின்றி  மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக என தமிழக அரசு அறிவித்துள்ளது.


டிசம்பர் 3ம் தேதியன்று வங்கக்கடலில் ஏற்பட்ட மிச்சாங் புயல் காரணமாக, சென்னை ,திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,ஆகிய நான்கு மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்தது . இப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து தீவு போலானது . இதனால் மக்கள் மின்சாரம், அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த மழை வெள்ளத்தில் பல்வேறு பொருட்கள் தண்ணீருக்கு இறையானது.பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்க தமிழக அரசு பல்வேறு மீட்பு  நடவடிக்கைகளிலும், நிவாரண பணிகளிலும் ஈடுபட்டது.




மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடைசி தேதியாக 4.12.23 மற்றும் 7.12.23 ஆகிய தேதிகளில்   அபராத தொகை இன்றி மின் கட்டணம் செலுத்த  அறிவுறுத்தி இருந்த நிலையில் , ஒரு சில பகுதிகளில்  நிலைமையை இன்னும் சீரடையாமல் இருந்து வருகிறது.தற்போது பல்வேறு பகுதியை சேர்ந்த நலிவடைந்த  மக்களால் மின்சார கட்டணத்தை கட்ட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.


இந்நிலையில் தற்போது இந்த நான்கு மாவட்டங்களுக்கும் வரும் 18 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த அறிவிப்பு நான்கு மாவட்டங்களை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உட்பட அனைத்து நுகர்வோருக்கும் பொருந்தும் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?

news

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்

news

சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!

news

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ

அதிகம் பார்க்கும் செய்திகள்