- மஞ்சுளா தேவி
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே 4 மற்றும் 7 ஆம் தேதி மின்கட்டணம் செலுத்த அறிவித்திருந்த நிலையில் வரும் 18ஆம் தேதி வரை அபராத தொகையின்றி மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக என தமிழக அரசு அறிவித்துள்ளது.
டிசம்பர் 3ம் தேதியன்று வங்கக்கடலில் ஏற்பட்ட மிச்சாங் புயல் காரணமாக, சென்னை ,திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,ஆகிய நான்கு மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்தது . இப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து தீவு போலானது . இதனால் மக்கள் மின்சாரம், அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த மழை வெள்ளத்தில் பல்வேறு பொருட்கள் தண்ணீருக்கு இறையானது.பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்க தமிழக அரசு பல்வேறு மீட்பு நடவடிக்கைகளிலும், நிவாரண பணிகளிலும் ஈடுபட்டது.

மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடைசி தேதியாக 4.12.23 மற்றும் 7.12.23 ஆகிய தேதிகளில் அபராத தொகை இன்றி மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தி இருந்த நிலையில் , ஒரு சில பகுதிகளில் நிலைமையை இன்னும் சீரடையாமல் இருந்து வருகிறது.தற்போது பல்வேறு பகுதியை சேர்ந்த நலிவடைந்த மக்களால் மின்சார கட்டணத்தை கட்ட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த நான்கு மாவட்டங்களுக்கும் வரும் 18 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த அறிவிப்பு நான்கு மாவட்டங்களை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உட்பட அனைத்து நுகர்வோருக்கும் பொருந்தும் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பையில் திருப்பம்.. ‘புறக்கணிப்பு’ முடிவிலிருந்து பாகிஸ்தான் யூ-டர்ன்?
எழுந்தது முதல்.. இரவில் படுக்கையில் சாயும் வரை.. எங்கெங்கும் ஏஐ..!
Propse Day: காதலுக்கு முன்பு.. அன்பை வெளிப்படுத்துங்க.. அதை உணர்த்துங்க!
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
{{comments.comment}}