சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் மேற்பார்வையாளர் உள்பட அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 2000 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடைகளிலின் மூலம் நாள் ஒன்றிற்கு சாராசரியாக 100 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில, தீபாவளி மற்றும் பண்டிகை நாட்களில் இந்த லாபம் மேலும் பல மடங்கு உயர்ந்து காணப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர். அப்போது ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்கப்பட்டதாக புகார்கள் வந்தன. இந்த புகாரையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார்கள் வந்தால், குறிப்பிட்ட சேல்ஸ்மேன் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இந்தாண்டு கூடுதல் விலைக்கு மது விற்கப்பட்டால், சூப்பர்வைசர் உட்பட கடையில் பணிபுரியும் அனைவருமே பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக டாஸ்மார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூபாய் 10 அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் கடை பணிப்பாளர்கள் மீது பார்வை ஏழு காணும் நேர்முக கடிதத்தின் படி நடவடிக்கை எடுப்பதுடன், கடைப்பணியில் உள்ள அனைத்து கடை விற்பனையாளர்கள், கடை மேற்பார்வையாளர் உட்பட அனைவரும் கூட்டுப் பொறுப்பாக்கி கடை பணியாளர்களை உடனடியாக தற்காலிகப் பணி இடை நீக்கம் செய்து தக்க நடவடிக்கை எடுக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் தேர்வுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகளை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும் மாவட்ட மேலாளர்களும் சிறப்பு பறக்கும் படை அலுவலர்களும் தவறாது கடைபிடிக்கும் மாறும் இச்சுற்றறிக்கையினை அனைத்து பாணியாளர்களுக்கும் சார்பு செய்து வழங்கி ஒப்புதல் பெற்று கோப்பில் பராமரிக்குமாறும் மேற்படி சுற்றறிக்கையினை சார்பு செய்து ஒப்புதல் பெற்றுக் கொண்டமைக்கு மாவட்ட மேலாளர்கள் அளவில் ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}