கூடுதல் விலைக்கு மது விற்கப்பட்டால் சஸ்பெண்ட்.. ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

Nov 01, 2024,03:13 PM IST

சென்னை:   டாஸ்மாக் கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் மேற்பார்வையாளர் உள்பட அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் சுமார் 2000 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடைகளிலின் மூலம் நாள் ஒன்றிற்கு சாராசரியாக 100 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில, தீபாவளி மற்றும் பண்டிகை நாட்களில் இந்த லாபம் மேலும் பல மடங்கு உயர்ந்து காணப்படுவது வழக்கம்.




இந்த நிலையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை  கொண்டாடப்பட்ட நிலையில், மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர். அப்போது ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்கப்பட்டதாக புகார்கள் வந்தன. இந்த புகாரையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார்கள் வந்தால், குறிப்பிட்ட சேல்ஸ்மேன் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆனால், இந்தாண்டு கூடுதல் விலைக்கு மது விற்கப்பட்டால், சூப்பர்வைசர் உட்பட கடையில் பணிபுரியும் அனைவருமே பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக டாஸ்மார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வெளியிட்டுள்ள அறிக்கை:  மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூபாய் 10 அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் கடை பணிப்பாளர்கள் மீது பார்வை ஏழு காணும் நேர்முக கடிதத்தின் படி நடவடிக்கை எடுப்பதுடன், கடைப்பணியில் உள்ள அனைத்து கடை விற்பனையாளர்கள், கடை மேற்பார்வையாளர் உட்பட அனைவரும் கூட்டுப் பொறுப்பாக்கி கடை பணியாளர்களை உடனடியாக தற்காலிகப் பணி இடை நீக்கம் செய்து தக்க நடவடிக்கை எடுக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் தேர்வுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகளை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும் மாவட்ட மேலாளர்களும் சிறப்பு பறக்கும் படை அலுவலர்களும் தவறாது கடைபிடிக்கும் மாறும் இச்சுற்றறிக்கையினை அனைத்து பாணியாளர்களுக்கும் சார்பு செய்து வழங்கி ஒப்புதல் பெற்று கோப்பில் பராமரிக்குமாறும் மேற்படி சுற்றறிக்கையினை சார்பு செய்து ஒப்புதல் பெற்றுக் கொண்டமைக்கு மாவட்ட மேலாளர்கள் அளவில் ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்