சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் மேற்பார்வையாளர் உள்பட அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 2000 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடைகளிலின் மூலம் நாள் ஒன்றிற்கு சாராசரியாக 100 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில, தீபாவளி மற்றும் பண்டிகை நாட்களில் இந்த லாபம் மேலும் பல மடங்கு உயர்ந்து காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர். அப்போது ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்கப்பட்டதாக புகார்கள் வந்தன. இந்த புகாரையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார்கள் வந்தால், குறிப்பிட்ட சேல்ஸ்மேன் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இந்தாண்டு கூடுதல் விலைக்கு மது விற்கப்பட்டால், சூப்பர்வைசர் உட்பட கடையில் பணிபுரியும் அனைவருமே பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக டாஸ்மார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூபாய் 10 அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் கடை பணிப்பாளர்கள் மீது பார்வை ஏழு காணும் நேர்முக கடிதத்தின் படி நடவடிக்கை எடுப்பதுடன், கடைப்பணியில் உள்ள அனைத்து கடை விற்பனையாளர்கள், கடை மேற்பார்வையாளர் உட்பட அனைவரும் கூட்டுப் பொறுப்பாக்கி கடை பணியாளர்களை உடனடியாக தற்காலிகப் பணி இடை நீக்கம் செய்து தக்க நடவடிக்கை எடுக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் தேர்வுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகளை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும் மாவட்ட மேலாளர்களும் சிறப்பு பறக்கும் படை அலுவலர்களும் தவறாது கடைபிடிக்கும் மாறும் இச்சுற்றறிக்கையினை அனைத்து பாணியாளர்களுக்கும் சார்பு செய்து வழங்கி ஒப்புதல் பெற்று கோப்பில் பராமரிக்குமாறும் மேற்படி சுற்றறிக்கையினை சார்பு செய்து ஒப்புதல் பெற்றுக் கொண்டமைக்கு மாவட்ட மேலாளர்கள் அளவில் ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}