- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: கோவைப்பழம் கிளிக்கு சூப்பரா பிடிக்கும்.. கோவக்காய் நமக்கு சூப்பரான உணவு.. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கோவக்காய் நல்ல பலன் தரும்னு சொல்வாங்க.. அப்படிப்பட்ட கோவக்காயுடன், வேர்க்கடலையையும் சேர்த்து ஒரு அட்டகாசமான டிஷ் பண்ணலாம் தெரியுமா.. தெரியாட்டி கவலைப்படாதீங்க.. நாங்க சொல்லித் தர்றோம்.. வாங்க கிச்சனுக்கு ஓடலாம்!
தேவையான பொருட்கள் :
1. கோவக்காய் - 1 கப் (கழுவி நறுக்கியது)
2. வேர்க்கடலை (பச்சை) - dry roast செய்து மிக்ஸியில் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்
3. சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
4. பூண்டு - 3 பல் (நறுக்கியது)
5. எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, மல்லித்தழை - தாளிக்க
6. மிகாய் தூள் - 1/2 ஸ்பூன்
(உப்பு, காரம் தேவைக்கு ஏற்ப)
செய்முறை :
1. கோவக்காயை கழுவி நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2. குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து, ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
3. அதே குக்கரில் சின்ன வெங்காயம், கோவக்காய், மிளகாய் தூள், பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறி விட வேண்டும்.
4. 1/4 கப் தண்ணீர் தெளித்து விட்டு குக்கரை ஒரு விசில் விட்டு வேக வைத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
5. பிரஷர் அடங்கியதும் வேர்க்கடலை பொடி, மல்லித்தழை, தாளித்து வைத்தது ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கிளறினால் சுவையான கோவக்காய் வேர்க்கடலை பொரியல் ரெடி.
நன்மைகள் :
கோவக்காய் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு. தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. தினமும் 100 கிராம் இதனை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உடல் எடை குறையும். இது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மிகவும் ஏற்ற உணவாகும். கோவக்காயில் உள்ள ஆன்டிஆக்சிடண்ட் சத்துக்கள், பீடா கரோடின் ஆகியவை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். இதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி 1, பி2, நார்ச்சத்து போன்றவை உள்ளதால் இதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கட்சி நிர்வாகிகள் மாற்றம்.. இது களையெடுப்பல்ல.. கட்டுமானச் சீரமைப்பு.. முதல்வர் மு.க. ஸ்டாலின்
சட்டவிரோதமாக அமெரிக்காவில்.. குடியேறியுள்ள இந்தியர்களை.. திரும்பப் பெற தயார்.. பிரதமர் மோடி உறுதி
தவெக தலைவர் விஜய்க்கு.. ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க.. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி.. பிப்ரவரி 20ல் முழக்கப் போராட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
சென்னையில்.. நாளையும் பனிமூட்டம் இருக்கும்.. மற்ற பகுதிகளில் ஒரு வாரத்திற்கு.. வறண்ட வானிலை!
சரயு நதிக்கரையில்.. ஜல சமாதி செய்யப்பட்ட.. ராமர் கோவில்.. தலைமை அர்ச்சகர் ஆச்சார்யாவின் உடல்
மார்ச் 22ஆ இல்லாட்டி 23ஆம் தேதியா.. ஐபிஎல் தொடங்குவது எப்போ?.. தொடக்க விழாவுடன் முதல் போட்டி!
ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 11,344 பட்டுச் சேலைகள்.. இன்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு
இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுக்க வேண்டும்?.. பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!
{{comments.comment}}