சென்னையில் இன்று முதல் டீ,காபி விலை உயர்வு.. அச்சச்சோ.. குடிக்காம இருக்க முடியாதே!

Sep 01, 2025,06:23 PM IST
சென்னை : சென்னையில் இன்று முதல் கடைகளில் டீ, காபி விலை உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாமாணிய மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று முதல் ஒரு கிளாஸ் டீ ரூ.10 மற்றும் ரூ.12 ல் இருந்து ரூ.15 ஆக உயர்த்தப்படுவதாகவும், காபி விலை 15ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுவதாகவும் டீ கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் விலை, டீ மற்றும் காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு ஆகியவை அதிகரித்திருப்பதால் டீ, காபி விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நம்ம ஊரில் டீ காபிக்கு அடிமையானவர்கள்தான் அதிகம். வேலை பார்க்கும்போது இடை இடையே டீ சாப்பிடாமல், காபி சாப்பிடாமல் கூடவே வடை பஜ்ஜி போண்டா என்று ஸ்னாக்ஸ் சாப்பிடாமல் பலருக்கும் இருக்க முடியாது. நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இது மாறி விட்டது.





டீக் கடைகள் இப்போது அதிக அளவில் உள்ளன. இது ஒரு பெரிய பிசினஸாகவும் உள்ளது. குழுமங்களாக இப்போது டீ விற்பனை நிலையங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் டீ காபி விலை அதிகரிப்பு பலருக்கும் குறிப்பாக அன்றாட வேலை பார்ப்போருக்கும், அலுவலகம் செல்வோருக்கும் பெரும் இடியாக வந்து சேர்ந்துள்ளது.

ஆங்காங்கு மதுக் கடைகளை அரசு திறந்து வைத்திருப்பது போல மக்கள் நலனுக்காக பேசாமல் டீக் கடைகளையும் கூட திறந்து வைத்து சலுகை விலையில் டீ காபி விற்பனை செய்யலாம். அல்லது ஆவின் பார்லர்களில் இனிமேல் சலுகை விலையில் டீ காபி விற்பனை செய்தாலும் நன்றாகத்தான் இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!

news

தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

news

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து

news

திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

news

நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!

news

சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!

news

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!

news

திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்

அதிகம் பார்க்கும் செய்திகள்