சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை 100 முதல் 104 டிகிரி வரை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு வெயில் சதத்தை தாண்டும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாத தொடக்கத்திலேயே கோடை காலம் துவங்கி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனைத் தொடர்ந்து மத்தியில் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் குளுமையான சூழல் நிலவியது. தற்போது மார்ச் இறுதிக் கட்டத்தில் மீண்டும் வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே சமயத்தில் மதிய வேலைகளில் வெப்ப அலையும் வீசுவதால் புழுக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக 104 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆந்திர கடற்கரைக்கு அருகிலுள்ள வடக்கு மாவட்டங்களான வேலூர்,ராணிப்பேட்டை,திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இன்று வெப்பமான நாளாக இருக்கும். கடலிலிருந்து வெகு தொலைவில் உள்ள சென்னையின் உட்புறப் பகுதிகளும் கொந்தளிப்பாக இருக்கும்.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் கடலோரப் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக வேலூரில் இன்றோ அல்லது நாளையோ வெயில் 104° பாரன்ஹீட் வரை பதிவாகும். மதுரை, சேலம், ஈரோடு, கரூர், ஆகிய நான்கு மாவட்டங்களில் வெப்பநிலை 100 முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும்.
திருச்சி மற்றும் கோவையில் வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகலாம் என கூறியுள்ளார்.
அதேபோல் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு வெயில் சதத்தை தாண்டும் எனவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}