புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதற்கான டோக்கன்கள் இன்று விநியோகிக்கப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இதோ வந்து விட்டது.. இன்னும் 10 நாட்கள்தான் இருக்கிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டு தோறும் தமிழகத்தின் பல முக்கிய மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொன்றாக நடைபெறவுள்ளன.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போன்று தான் தச்சங்குறிச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் புதுக்கட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தான் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஆறாம் தேதி தொடங்குகிறது. இதற்கான பணிகள் முழு வீச்சி நடைபெற்று வருகின்றன.
வாடிவாசல் புதுப்பிப்பு, பேரிகார்டு அமைப்பது, காளைகளுக்கு பயிற்சி என் பல முன்னேற்பாடுகள் தொடந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு இன்று டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. இந்த டோக்கனை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://pudukkottai.nic.in/jallikattu/ என்ற இணையதள முகவரி வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}