2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு.. ரெடியாகும் தச்சங்குறிச்சி.. இன்று டோக்கன் விநியோகம்!

Jan 04, 2024,01:13 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதற்கான டோக்கன்கள் இன்று விநியோகிக்கப்படுகிறது.


தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான  பொங்கல் பண்டிகை  இதோ வந்து விட்டது.. இன்னும் 10 நாட்கள்தான் இருக்கிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை. 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டு தோறும் தமிழகத்தின் பல முக்கிய மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொன்றாக நடைபெறவுள்ளன.




அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போன்று தான் தச்சங்குறிச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் புதுக்கட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தான் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஆறாம் தேதி தொடங்குகிறது. இதற்கான பணிகள் முழு வீச்சி நடைபெற்று வருகின்றன. 


வாடிவாசல் புதுப்பிப்பு, பேரிகார்டு அமைப்பது, காளைகளுக்கு பயிற்சி என் பல முன்னேற்பாடுகள் தொடந்து நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு இன்று டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. இந்த டோக்கனை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


https://pudukkottai.nic.in/jallikattu/  என்ற இணையதள  முகவரி வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்