தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

Jan 18, 2026,10:07 AM IST

- வ.சரசுவதி


தை மாதத்தில் வரும் அமாவாசை மிகச் சிறப்பு வாய்ந்த அமாவாசை என அழைக்கப்படுகிறது. 18.01.2026 அன்று வரும் தை அமாவாசை, தமிழ் மக்களின் ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு வாழ்வில் முக்கியத்துவம் பெற்ற ஒரு நாளாகும். அமாவாசை என்பது சந்திரன் முழுமையாக மறையும் நாள். இந்த நாள் மறைவு மட்டுமல்ல; நினைவு, நன்றி, மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள் என்றும் கருதப்படுகிறது.


தை மாதம் புதுப்பிப்பு, நம்பிக்கை, முன்னேற்றம் ஆகியவற்றை குறிக்கும் மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அமாவாசை, முன்னோர்களை நினைவு கூறும் நாளாக முக்கியத்துவம் பெறுகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, தை அமாவாசை வாழ்க்கையில் புதிய வழிகளைத் திறக்கும் ஒரு ஆன்மீகத் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.


முன்னோர் வழிபாடு


தை அமாவாசையின் முக்கிய அம்சம் பித்ரு தர்ப்பணம் மற்றும் முன்னோர் வழிபாடு. முன்னோர்களின் ஆன்மா சாந்தி பெறவும், அவர்களின் ஆசீர்வாதம் சந்ததியினருக்கு கிடைக்கவும் இந்த வழிபாடுகள் செய்யப்படுகின்றன. நதிக்கரைகள், கடற்கரைகள், புனித தீர்த்தங்கள் மற்றும் வீடுகளில் கூட இந்த வழிபாடுகள் நடக்கின்றன. எள், அரிசி, தர்ப்பை, நீர் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்யும் மரபு வழக்கில் உள்ளது.


இந்த நாள் குடும்பங்களை ஒன்றிணைக்கும் நாளாகவும் உள்ளது. பெரியவர்கள் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்கள், அறநெறிகள், தியாகங்கள் குறித்து இளைய தலைமுறைக்கு எடுத்துரைப்பது வழக்கம். இதன் மூலம் பண்பாட்டு தொடர்ச்சி பாதுகாக்கப்படுகிறது.




ஆன்மீக உணர்வு


அமாவாசை அன்று தியானம், ஜபம், தர்மம் செய்வது மன அமைதியையும், உள்ளார்ந்த சுத்தியையும் அளிக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக தை அமாவாசை அன்று செய்யப்படும் தானம் பலன் அளிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


18.01.2026 அன்று வரும் தை அமாவாசை, முன்னோர்களை நினைவு கூறும் ஒரு புனித நாளாக மட்டுமல்லாமல், வாழ்க்கையை சீரமைத்து புதிய தொடக்கத்திற்குத் தயாராகும் ஆன்மிக தருணமாகவும் விளங்குகிறது. இந்த நாளில் நாம் காட்டும் நன்றி, மரியாதை மற்றும் அறநெறி, நமது வாழ்க்கை வழியை ஒளியூட்டும் என நம்பப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமை அமாவாசை அதிகாலை 1.20 முதல் 19.01.2026 அதிகாலை 2.31 வரை உள்ளது. இந்த நேரத்தில் நம் முன்னோர்களை நினைத்து தர்பணம் செய்து, 2 நபர்களுக்கு அன்னதானம் அளித்து நம் முன்னோர்களின் ஆசி பெற்று வாழ்வோமாக!


(சரசுவதி சிவக்குமார், திருமங்கலம், மதுரை. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள் படைத்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

அதிகம் பார்க்கும் செய்திகள்