- சிவ.ஆ.மலர்விழி ராஜா
தைமகளும் பிறந்து விட்டாள்
தரணியும் செழித்திடவே......
இல்லை என்ற சொல்லும் நீங்கிடவே
இல்லறம் நல்லறமாகிடவே.....
பந்தங்கள்
சூழ்ந்திடவே
பாசமும் பிணைந்திடவே......
ஆணவம்
அழிந்திடவே ஆரோக்கியம் நிறைந்திடவே........

அகங்காரம் மறைந்திடவே
அலட்சியமும் விலகிடவே......
துரோகங்கள் தொலைந்திடவே
வஞ்சகமும் நலிந்திடவே......
கோபங்களும் குறைந்திடவே
சுயநலமும் மறைந்திடவே......
வளங்களும்
பெருகிடவே ஏற்றங்கள்
அருளிடவே........
இறையருள் நிறைந்திடவே
கலைகள் பல தந்திடுவாள்
காவியமும்
படைத்திடுவாள்......
விரும்பிய வாழ்க்கை
அமைந்திடவே வேண்டும் வரம் தந்திடுவாள்.......
தைமகளை
வரவேற்று தரணிபோற்ற
வாழ்ந்திடுவோம்.......!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை
இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்
ராஜ்ய சபா எம்பி ஆகிறார் நிதின் நபீன்: பாஜகவின் இளம் தேசிய தலைவர் பீகாரிலிருந்து தேர்வு
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை
இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?
திமுக - காங்கிரஸ் கூட்டணி: இழுபறிக்கு இடையில் இன்று முக்கிய அறிவிப்பு?
தடையினை உடைத்திடு
{{comments.comment}}