தை மகள் பிறந்தாள்

Jan 16, 2026,12:18 PM IST

- சிவ.ஆ.மலர்விழி ராஜா 


தைமகளும் பிறந்து விட்டாள் 

தரணியும் செழித்திடவே......


இல்லை என்ற சொல்லும் நீங்கிடவே

இல்லறம் நல்லறமாகிடவே‌.‌....


பந்தங்கள்    

சூழ்ந்திடவே

பாசமும் பிணைந்திடவே......


ஆணவம் 

அழிந்திடவே ஆரோக்கியம் நிறைந்திடவே........




அகங்காரம் மறைந்திடவே

அலட்சியமும் விலகிடவே......


துரோகங்கள் தொலைந்திடவே

வஞ்சகமும் நலிந்திடவே......


கோபங்களும் குறைந்திடவே

சுயநலமும் மறைந்திடவே......


வளங்களும்

பெருகிடவே  ஏற்றங்கள் 

அருளிடவே........


இறையருள் நிறைந்திடவே

தைமகளும்

பிறந்து விட்டாள்.....


கலைகள் பல தந்திடுவாள்

காவியமும்

படைத்திடுவாள்......


விரும்பிய வாழ்க்கை 

அமைந்திடவே வேண்டும் வரம் தந்திடுவாள்.......


தைமகளை 

வரவேற்று தரணிபோற்ற 

வாழ்ந்திடுவோம்.......!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்