தை மகள் பிறந்தாள்

Jan 16, 2026,12:18 PM IST

- சிவ.ஆ.மலர்விழி ராஜா 


தைமகளும் பிறந்து விட்டாள் 

தரணியும் செழித்திடவே......


இல்லை என்ற சொல்லும் நீங்கிடவே

இல்லறம் நல்லறமாகிடவே‌.‌....


பந்தங்கள்    

சூழ்ந்திடவே

பாசமும் பிணைந்திடவே......


ஆணவம் 

அழிந்திடவே ஆரோக்கியம் நிறைந்திடவே........




அகங்காரம் மறைந்திடவே

அலட்சியமும் விலகிடவே......


துரோகங்கள் தொலைந்திடவே

வஞ்சகமும் நலிந்திடவே......


கோபங்களும் குறைந்திடவே

சுயநலமும் மறைந்திடவே......


வளங்களும்

பெருகிடவே  ஏற்றங்கள் 

அருளிடவே........


இறையருள் நிறைந்திடவே

தைமகளும்

பிறந்து விட்டாள்.....


கலைகள் பல தந்திடுவாள்

காவியமும்

படைத்திடுவாள்......


விரும்பிய வாழ்க்கை 

அமைந்திடவே வேண்டும் வரம் தந்திடுவாள்.......


தைமகளை 

வரவேற்று தரணிபோற்ற 

வாழ்ந்திடுவோம்.......!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்