சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், 2026-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி தான் பொங்கல் என்று பஞ்சாங்கங்கள் குறிப்பிடுவதால் பொதுமக்களிடையே ஒரு சிறிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
குழப்பம் ஏன்?

பொதுவாக சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் நுழையும் நேரமே தை மாதப் பிறப்பு அல்லது மகர சங்கராந்தி எனப்படுகிறது. 2026-ம் ஆண்டில், ஜனவரி 14-ம் தேதி மாலை நேரத்திலேயே சூரியன் மகர ராசிக்குள் நுழைந்து விடுகிறார். இதனால் அன்றைய தினமே சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இருப்பினும், தமிழ் கலாச்சாரத்தின்படி ஒரு நாளின் கணக்கீடு என்பது சூரிய உதயத்தில் இருந்தே தொடங்குகிறது.
ஜனவரி 15 ஏன் பொங்கல்?
ஜனவரி 14 அன்று மாலை தை மாதம் பிறந்தாலும், சூரிய உதயத்தின் போது மார்கழி மாதமே நீடிக்கிறது.ஜனவரி 15-ம் தேதி காலையில் சூரியன் உதிக்கும் போது தை மாதம் பிறந்திருப்பதால், அன்றைய தினமே தை முதல் நாளாகவும், பொங்கல் பண்டிகையாகவும் கணக்கிடப்படுகிறது. அதிகாலையில் சூரிய உதயத்தின் போது பொங்கலிட்டு வழிபடுவதே முறை என்பதால், ஜனவரி 15-ம் தேதியே சிறந்தது.
2025ம் ஆண்டு மாதம் டிசம்பர் 16ம் தேதியன்று காலை 11.57 மணிக்கே பிறந்துள்ளது. இதனால் 2026ம் ஆண்டில் தை மாத பிறப்பும் தாமதமாகி உள்ளது. இதன் காரணமாக தான் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியன்று போகி பண்டிகையும், ஜனவரி 15ம் தேதியன்று தைப் பொங்கலும், ஜனவரி 16ம் தேதியன்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது.
முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!
பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
{{comments.comment}}