சிங்கப்பூர்: சிங்கப்பூர், மலேசியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தைப்பூச விழாவை தமிவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
தைப்பூச விழாவானது பழங்கால தொட்டு தமிழகத்தில் முருகன் சிவன் கோயில்களை கொண்டாடப்பட்டு வருகிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிப்பகங்களில் குறிப்புகள் உள்ளன. இந்ந நாளில் முருகனுக்கு தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அழகு குத்துதல், சர்க்கரை காவடி, தீபக் காவடி, பறவை காவடி, பால் காவடி, மச்ச காவடி, மயில் காவடி, சந்தன காவடி, சர்ப்ப காவடி, சேவற் காவடி, வேல் காவடி, விளக்கு காவடி என பல்வேறு வகையாக முருகனுக்கு காவடி எடுத்து தை பூச திருநாளை கொண்டாடுகின்றனர்.

சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் தைப்பூசத்திற்கு முதல் நாளிலிருந்து விழா களை கட்டும். இங்குள்ள முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நடப்பது வழக்கம். தைப்பூச நாளில் முருகன் வெள்ளி தேரில் வீதி உலா வருவார். காலையில் இருந்து மாலை வரை இந்த ஊர்வலம் நடக்கும். பக்தர்கள் பலவகையான காவடி எடுப்பார்கள், மற்றவர்கள் பெரும் திரளாக தேரினை இழுத்துச் செல்வார்கள்.
அழகு குத்தியும் இங்கு நேர்த்திக்கடன் செலுத்துவோரும் உண்டு. தைபூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இந்த விழாவில் தமிழர்கள் மற்றும் இன்றி சீனர்களும் கூட முருகன் கோவில்களுக்கு வந்து வணங்கி வேண்டுதல்களை செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவில் மலேசிய தமிழர்களிடையே புகழ்பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானது இந்த பத்துமலை கோவில். கோலாலம்பூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இது ஒரு மலைக்கோவிலாகும். சுண்ணாம்பு பாறைகளான இந்த மலைக்கோவிலில் ஏராளமான குகைகள் இங்கு அமைந்திருக்கும்.

மலையை ஒட்டி பத்து ஆறு ஓடுகிறது. பத்து மலை முருகன் கோயில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலை கோவிலில் குவிக்கிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலில் இருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருவார்கள். இதற்கு 8 மணி நேரம் ஆகுமாம்.
சிலர் காவடி ஏந்தியும், அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருவதும் உண்டு. மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுனில் உள்ள தண்ணீர் மலை கோவிலிலும் பினாங்கு தைப்பூசம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பினாங்கில் தைப்பூச திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு இங்குள்ள மாநில அரசும் பொது விடுமுறையும் அறிவிக்குமாம்.
ஈழம், மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா, பிஜி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகுளிலும் முருகனுக்கு கோவில்கள் இருப்பதுடன் அங்கும் தைப்பூச விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}