சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான 'தலைவர் 173' குறித்த உற்சாகமான தகவல்களை நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்த அவர், இந்தப் புதிய படம் குறித்த முக்கிய அப்டேட்களை வழங்கினார்.
'டான்' பட புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இந்தப் படத்தை இயக்கவுள்ளார். முதலில் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலகியதைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறது. இந்த படம் பற்றி அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்த நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் பற்றி அப்டேட்டை ரஜினியே வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இது ஒரு பக்கா கமர்ஷியல் என்டர்டெய்னராக (Commercial Entertainer) இருக்கும்," என்று தெரிவித்தார். இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படம் 2027 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது, விவசாயிகளின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய ரஜினி, "விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நாடு செழிக்கும்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்தத் திரைப்படம் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகிய இரு திரையுலக ஜாம்பவான்களையும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர்-நடிகர் என்ற முறையில் இணைத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}