சென்னை : தமிழக அரசியல் மற்றும் திரையுலகில் தற்போது பேசுபொருளாக இருக்கும் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' (Jana Nayagan) திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ள நிலையில், விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து மெகா ஹிட்டான 'தெறி' (Theri) திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளதால், அவரது 'ஜனநாயகன்' திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், சென்சார் விவகாரத்தால் இந்த பட விவகாரம் கோர்ட் வரை சென்றுள்ளது. சென்சார் போர்டும் தொடர்ந்து மேல்முறையீடு செய்து வருகிறது. மற்றொரு புறம் தயாரிப்பாளர் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் படம் எப்போது ரிலீசாகும் என தெரியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரசிகர்களின் ஏமாற்றத்தைப் போக்கவும், திரையரங்குகளுக்குப் புத்துயிர் அளிக்கவும் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் மைல்கல்லாக அமைந்த 'தெறி' படத்தை மறுவெளியீடு (Re-release) செய்யத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனை அந்த படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணுவே சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி, வரும் ஜனவரி 24-ஆம் தேதி 'தெறி' திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள முக்கியத் திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு வெளியாக உள்ளது. 2016-இல் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. இதில் விஜய்யின் மூன்று விதமான பரிமாணங்கள் மற்றும் சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. குறிப்பாக, ஜி.வி. பிரகாஷின் இசை இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட்.
தற்போது தமிழக அரசியல் களத்தில் பிஸியாக இருக்கும் விஜய்யை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 'ஜனநாயகன்' தாமதமானது சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும், 'தெறி' போன்ற ஒரு மாஸ் கமர்ஷியல் படத்தை மீண்டும் திரையில் கொண்டாடுவது ஒரு திருவிழா போல அமையும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}