தஞ்சை: தஞ்சையை சேர்ந்த பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட 10 ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை இன்று காலமானார். அவருக்கு வயது 96. இவர் சுமார் 65,000க்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களைப் பார்த்துள்ளார். இவர் டாக்டர் டி.கே.சுவாமிநாதனின் தந்தையாவார். மனித நேய பண்பாளர் என்று பலராலும் அழைக்கப்பட்டவர்.
டாக்டர் ரத்தினம் பிள்ளை கடந்த 50 ஆண்டுகளாக, எந்தகைய கொடிய நோய்க்கும் மக்களிடம் குறைந்தளவு பணத்தை பெற்றுக்கொண்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். கைராசிக்கார டாக்டர் என்ற பெயருக்கும் சொந்தக்காரர். எப்படிப்பட்ட சிக்கலான பிரசவமாக இருந்தாலும் ஆபரேஷன் செய்யாமலேயே சுகப்பிரசவம் செய்தவர். இப்பகுதி மக்களால் போற்றப்பட்டு வந்தவர் டாக்டர் ரத்தினம்பிள்ளை.

இவரின் இந்த மருத்துவ சேவையை பாராட்டி பல்வேறு சமூக நல அமைப்புகள் இவருக்கு மனிதநேய மருத்துவர் என்ற விருதினை வழங்கி கெளரவித்து வந்துள்ளது. இந்தநிலையில், வயது மூப்பு காரணமாக டாக்டர் ரத்தினம் பிள்ளை இன்று காலமானார். அன்னாரின் மறைவிற்கு பலதரப்பட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றன. இவரது இறுதி ஊர்வலம் ஜூன் 8ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!
சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!
Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!
திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
{{comments.comment}}