தஞ்சை: தஞ்சையை சேர்ந்த பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட 10 ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை இன்று காலமானார். அவருக்கு வயது 96. இவர் சுமார் 65,000க்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களைப் பார்த்துள்ளார். இவர் டாக்டர் டி.கே.சுவாமிநாதனின் தந்தையாவார். மனித நேய பண்பாளர் என்று பலராலும் அழைக்கப்பட்டவர்.
டாக்டர் ரத்தினம் பிள்ளை கடந்த 50 ஆண்டுகளாக, எந்தகைய கொடிய நோய்க்கும் மக்களிடம் குறைந்தளவு பணத்தை பெற்றுக்கொண்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். கைராசிக்கார டாக்டர் என்ற பெயருக்கும் சொந்தக்காரர். எப்படிப்பட்ட சிக்கலான பிரசவமாக இருந்தாலும் ஆபரேஷன் செய்யாமலேயே சுகப்பிரசவம் செய்தவர். இப்பகுதி மக்களால் போற்றப்பட்டு வந்தவர் டாக்டர் ரத்தினம்பிள்ளை.
இவரின் இந்த மருத்துவ சேவையை பாராட்டி பல்வேறு சமூக நல அமைப்புகள் இவருக்கு மனிதநேய மருத்துவர் என்ற விருதினை வழங்கி கெளரவித்து வந்துள்ளது. இந்தநிலையில், வயது மூப்பு காரணமாக டாக்டர் ரத்தினம் பிள்ளை இன்று காலமானார். அன்னாரின் மறைவிற்கு பலதரப்பட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றன. இவரது இறுதி ஊர்வலம் ஜூன் 8ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை
விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?
Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
{{comments.comment}}