சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூரின் 9வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார் தர்மன் சண்முகரத்தினம்.
தமிழரான தர்மன் சண்முகரத்தினம் முன்னாள் அரசியல்வாதி ஆவார். கடந்த 2001 இல் சிங்கப்பூரின் ஜுரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் அரசியலை விட்டு விலகினார்.
சிங்கப்பூரில் தமிழ் மக்கள் 2வது பெரிய இனமாக உள்ளனர். அவர்களுக்கு மத்தியில் தர்மன் சண்முகரத்தினத்துக்கு நல்லஆதரவு இருந்தது. தற்போதைய அதிபர் ஹலிமா யாக்கோபின் பதவிக்கலாம் அடுத்த மாதம் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை அடுத்து புது அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கு அழைப்பு விடு்கப்பட்டது.
இந்த தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம், சீன வம்சாவளியை சேர்ந்த இன் கொக் செங் மற்றும் டான் கிங் லியான் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மூவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். மூன்று பேருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில் நடந்த தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் அபார வெற்றி பெற்றார். 70 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூரின் 9வது அதிபராக இவர் பொறுப்பேற்கவுள்ளார்.
இதற்கு முன்பு தமிழரான எஸ்.ஆர். நாதன் எனப்படும் செல்லப்பன் ராமநாதன் 2009ம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். தற்போது 2வது தமிழராக தர்மன் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் சிங்கப்பூர் அதிபராவது இது மூன்றாவது முறையாகும்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}