புன்னகை எனும் மொழி!

Apr 22, 2026,12:30 PM IST

- கவிதா அறிவழகன்


ஆயிரம் வார்த்தைகள்

அடுக்கினாலும் வராத நெருக்கம்…

ஒரு சிறிய புன்னகையில் பூத்துவிடுகிறது!


ரோஜா கூட்டங்களுக்கு இடையில்

தனித்திருக்கும் கருநிற ரோஜாவாய்…புன்னகை எனும் மொழி

ஆயிரம் முகங்களுக்கு மத்தியிலும்

உன் மௌனத்தை மட்டும்

மனம் பிரித்தெடுத்து பார்க்கிறது.




மீட்டாத வீணையில்

உறங்கும் ராகம் போல…

வெளிப்படுத்தாத எண்ணங்களையும்

உன் கண்கள் அசையும் நொடியில்

இசைக்கத் தொடங்கும் ஒத்த ராகம்!


வண்ணங்கள் சிந்தாமல்,

தூரிகை தீட்டாமல்…

இதயத்தின் வெண்திரையில்

ஒருவருக்கொருவர் வரைந்துகொள்ளும்

அழகிய மௌன ஓவியம்!


கேட்காத ஓசைக்கு

பதில் சொல்லத் தேவையில்லை…

மழை வரும் முன்னே

மண் தரும் வாசம் போல,

சொல்லாத சொல்லுக்கு

உன் புரிதல் ஒன்றே போதும்!


என்னை விட்டுப் பிரியாத நிழலாய்…

என்னோடு கலந்த நதியாய்…

தேடல்கள் ஏது

மின்றி

தெளிவான நீரோடையாய்…

தொடர்கிறது நம் அழகிய புரிதல்!


பிறவிகள் மாறினாலும்

நம்முள் பிறந்த உணர்வு மாறாது…

உருவங்கள் மாறினாலும்

நம்முள் நெய்த இணைப்பு கலைந்து போகாது…


வார்த்தைகள் இல்லையெனினும்

ஆத்மா ஒன்றை ஒன்று அறிந்துகொள்ளும்…

அங்கே...

பிரிவும் இல்லை, எல்லையும் இல்லை…

ஒரே ஒளியாக

என்றும் தொடர்கிறோம் நாம்.


(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்