- கவிதா அறிவழகன்
ஆயிரம் வார்த்தைகள்
அடுக்கினாலும் வராத நெருக்கம்…
ஒரு சிறிய புன்னகையில் பூத்துவிடுகிறது!
ரோஜா கூட்டங்களுக்கு இடையில்
தனித்திருக்கும் கருநிற ரோஜாவாய்…புன்னகை எனும் மொழி
ஆயிரம் முகங்களுக்கு மத்தியிலும்
உன் மௌனத்தை மட்டும்
மனம் பிரித்தெடுத்து பார்க்கிறது.

மீட்டாத வீணையில்
உறங்கும் ராகம் போல…
வெளிப்படுத்தாத எண்ணங்களையும்
உன் கண்கள் அசையும் நொடியில்
இசைக்கத் தொடங்கும் ஒத்த ராகம்!
வண்ணங்கள் சிந்தாமல்,
தூரிகை தீட்டாமல்…
இதயத்தின் வெண்திரையில்
ஒருவருக்கொருவர் வரைந்துகொள்ளும்
அழகிய மௌன ஓவியம்!
கேட்காத ஓசைக்கு
பதில் சொல்லத் தேவையில்லை…
மழை வரும் முன்னே
மண் தரும் வாசம் போல,
சொல்லாத சொல்லுக்கு
உன் புரிதல் ஒன்றே போதும்!
என்னை விட்டுப் பிரியாத நிழலாய்…
என்னோடு கலந்த நதியாய்…
தேடல்கள் ஏது
மின்றி
தெளிவான நீரோடையாய்…
தொடர்கிறது நம் அழகிய புரிதல்!
பிறவிகள் மாறினாலும்
நம்முள் பிறந்த உணர்வு மாறாது…
உருவங்கள் மாறினாலும்
நம்முள் நெய்த இணைப்பு கலைந்து போகாது…
ஆத்மா ஒன்றை ஒன்று அறிந்துகொள்ளும்…
அங்கே...
பிரிவும் இல்லை, எல்லையும் இல்லை…
ஒரே ஒளியாக
என்றும் தொடர்கிறோம் நாம்.
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}