- தேவி
பார்வைகள் பூக்களாக பூக்க ஆரம்பித்தது
வார்த்தைகள் ஓசையின்றி நகர்ந்து சென்றது
மேக கூட்டங்கள் மகுடத்தை அணிவித்தது
மெல்லிசை ராகங்கள் காதுகளில் ஒலிக்க தொடங்கியது
நகத்தின் நுனிகளும் பேரழகாக தெரிய ஆரம்பித்தது
காதோரம் சினுங்கும் கரும் கூந்தலும்
காதல் ராகங்களுக்காக ஏங்க தொடங்கியது
கரும் விழிகளும்
என்னை அழகு படுத்து என்று
நச்சரிக்கத் தொடங்கியது
கிழிந்த ஆடைகளும்
புதியது புதியது என்ற மயக்கத்தை
கொடுக்க தொடங்கியது
வானில் பறக்கும் என்னை
இசைக்கத் தொடங்கியது
கால் கொலுசின் முத்து மணிகள் .....
உதட்டின் ஓரம்

என்னைத் தொட்டு வை என்று
கருமை பொட்டும்
கொஞ்ச ஆரம்பித்தது......
நடுவானில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு
கண்களை மூடிக்கொண்டு
மனதினை இசைத்துக் கொண்டு
பூத்துக் குலுங்கி சிரித்து மயங்க தொடங்கியது
மனதின் கனவு நிமிடங்கள்
இத்தனை அற்புதங்களும்
நீ என்னை விரும்பிய தருணத்தில்
நான் உணர்ந்த கனவுகளின் காவியமாக
மனதினை உருக்கிய கொண்டாட்டத்தின் வெளிப்பாடு!
கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}