நீ என்னை விரும்பிய தருணத்தில்.. நான் உணர்ந்த கனவுகளின் காவியமாக!

Mar 24, 2025,04:32 PM IST

- தேவி


பார்வைகள் பூக்களாக பூக்க ஆரம்பித்தது

வார்த்தைகள் ஓசையின்றி   நகர்ந்து சென்றது

மேக கூட்டங்கள் மகுடத்தை அணிவித்தது

மெல்லிசை ராகங்கள் காதுகளில் ஒலிக்க தொடங்கியது

நகத்தின் நுனிகளும் பேரழகாக தெரிய ஆரம்பித்தது

காதோரம் சினுங்கும் கரும் கூந்தலும் 

காதல் ராகங்களுக்காக ஏங்க தொடங்கியது

கரும் விழிகளும்

என்னை அழகு படுத்து என்று 

நச்சரிக்கத் தொடங்கியது

கிழிந்த ஆடைகளும் 

புதியது புதியது என்ற  மயக்கத்தை

கொடுக்க தொடங்கியது

வானில் பறக்கும் என்னை 

இசைக்கத் தொடங்கியது 

கால் கொலுசின் முத்து மணிகள் .....

உதட்டின் ஓரம் 




என்னைத் தொட்டு வை என்று 

கருமை பொட்டும்

கொஞ்ச ஆரம்பித்தது......

நடுவானில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு 

கண்களை மூடிக்கொண்டு 

மனதினை இசைத்துக் கொண்டு 

பூத்துக் குலுங்கி சிரித்து மயங்க தொடங்கியது

மனதின் கனவு நிமிடங்கள் 

இத்தனை  அற்புதங்களும் 

நீ என்னை விரும்பிய தருணத்தில்

நான் உணர்ந்த  கனவுகளின் காவியமாக 

மனதினை உருக்கிய  கொண்டாட்டத்தின் வெளிப்பாடு!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பனியும் கொட்டுது.. மழையும் பெய்யுது.. அப்படியே மூக்கும் ஒழுகுதா.. இந்தாங்க பாட்டி வைத்தியம்!

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

அதிமுக - பாஜக கூட்டணியை கண்டு திமுக நடுக்கிப்போயுள்ளது: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

news

மார்கழித் திங்கள் அல்லவா.. மதி கொஞ்சும் நாள் அல்லவா.. மார்கழி மாத சிறப்புகள்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம் தொட்ட நிலையில் இன்று சற்று குறைவு!

news

ஜோர்டானில் பிரதமர் நரேந்திர மோடி.. 2 நாள் சுற்றுப்பயணத்தில் என்னவெல்லாம் காத்திருக்கு?

news

365 நாட்களும் கவிதை.. வீடு தேடி வரும் சான்டாவின் சர்ப்பிரைஸ் பரிசுகள்.. கலக்கும் Creative Writers

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

ஐபிஎல் 2026.. மினி ஏலத்திற்கு அணிகள் ரெடி.. யாரிடம் எவ்வளவு பணம் இருக்கு பாருங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்