நீ என்னை விரும்பிய தருணத்தில்.. நான் உணர்ந்த கனவுகளின் காவியமாக!

Mar 24, 2025,04:32 PM IST

- தேவி


பார்வைகள் பூக்களாக பூக்க ஆரம்பித்தது

வார்த்தைகள் ஓசையின்றி   நகர்ந்து சென்றது

மேக கூட்டங்கள் மகுடத்தை அணிவித்தது

மெல்லிசை ராகங்கள் காதுகளில் ஒலிக்க தொடங்கியது

நகத்தின் நுனிகளும் பேரழகாக தெரிய ஆரம்பித்தது

காதோரம் சினுங்கும் கரும் கூந்தலும் 

காதல் ராகங்களுக்காக ஏங்க தொடங்கியது

கரும் விழிகளும்

என்னை அழகு படுத்து என்று 

நச்சரிக்கத் தொடங்கியது

கிழிந்த ஆடைகளும் 

புதியது புதியது என்ற  மயக்கத்தை

கொடுக்க தொடங்கியது

வானில் பறக்கும் என்னை 

இசைக்கத் தொடங்கியது 

கால் கொலுசின் முத்து மணிகள் .....

உதட்டின் ஓரம் 




என்னைத் தொட்டு வை என்று 

கருமை பொட்டும்

கொஞ்ச ஆரம்பித்தது......

நடுவானில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு 

கண்களை மூடிக்கொண்டு 

மனதினை இசைத்துக் கொண்டு 

பூத்துக் குலுங்கி சிரித்து மயங்க தொடங்கியது

மனதின் கனவு நிமிடங்கள் 

இத்தனை  அற்புதங்களும் 

நீ என்னை விரும்பிய தருணத்தில்

நான் உணர்ந்த  கனவுகளின் காவியமாக 

மனதினை உருக்கிய  கொண்டாட்டத்தின் வெளிப்பாடு!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

news

வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

news

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

news

மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!

news

நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!

news

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்