- தேவி
பார்வைகள் பூக்களாக பூக்க ஆரம்பித்தது
வார்த்தைகள் ஓசையின்றி நகர்ந்து சென்றது
மேக கூட்டங்கள் மகுடத்தை அணிவித்தது
மெல்லிசை ராகங்கள் காதுகளில் ஒலிக்க தொடங்கியது
நகத்தின் நுனிகளும் பேரழகாக தெரிய ஆரம்பித்தது
காதோரம் சினுங்கும் கரும் கூந்தலும்
காதல் ராகங்களுக்காக ஏங்க தொடங்கியது
கரும் விழிகளும்
என்னை அழகு படுத்து என்று
நச்சரிக்கத் தொடங்கியது
கிழிந்த ஆடைகளும்
புதியது புதியது என்ற மயக்கத்தை
கொடுக்க தொடங்கியது
வானில் பறக்கும் என்னை
இசைக்கத் தொடங்கியது
கால் கொலுசின் முத்து மணிகள் .....
உதட்டின் ஓரம்

என்னைத் தொட்டு வை என்று
கருமை பொட்டும்
கொஞ்ச ஆரம்பித்தது......
நடுவானில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு
கண்களை மூடிக்கொண்டு
மனதினை இசைத்துக் கொண்டு
பூத்துக் குலுங்கி சிரித்து மயங்க தொடங்கியது
மனதின் கனவு நிமிடங்கள்
இத்தனை அற்புதங்களும்
நீ என்னை விரும்பிய தருணத்தில்
நான் உணர்ந்த கனவுகளின் காவியமாக
மனதினை உருக்கிய கொண்டாட்டத்தின் வெளிப்பாடு!
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}