- தேவி
பார்வைகள் பூக்களாக பூக்க ஆரம்பித்தது
வார்த்தைகள் ஓசையின்றி நகர்ந்து சென்றது
மேக கூட்டங்கள் மகுடத்தை அணிவித்தது
மெல்லிசை ராகங்கள் காதுகளில் ஒலிக்க தொடங்கியது
நகத்தின் நுனிகளும் பேரழகாக தெரிய ஆரம்பித்தது
காதோரம் சினுங்கும் கரும் கூந்தலும்
காதல் ராகங்களுக்காக ஏங்க தொடங்கியது
கரும் விழிகளும்
என்னை அழகு படுத்து என்று
நச்சரிக்கத் தொடங்கியது
கிழிந்த ஆடைகளும்
புதியது புதியது என்ற மயக்கத்தை
கொடுக்க தொடங்கியது
வானில் பறக்கும் என்னை
இசைக்கத் தொடங்கியது
கால் கொலுசின் முத்து மணிகள் .....
உதட்டின் ஓரம்
என்னைத் தொட்டு வை என்று
கருமை பொட்டும்
கொஞ்ச ஆரம்பித்தது......
நடுவானில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு
கண்களை மூடிக்கொண்டு
மனதினை இசைத்துக் கொண்டு
பூத்துக் குலுங்கி சிரித்து மயங்க தொடங்கியது
மனதின் கனவு நிமிடங்கள்
இத்தனை அற்புதங்களும்
நீ என்னை விரும்பிய தருணத்தில்
நான் உணர்ந்த கனவுகளின் காவியமாக
மனதினை உருக்கிய கொண்டாட்டத்தின் வெளிப்பாடு!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}