தூய்மையான காற்று!

Mar 06, 2026,04:12 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


தூய்மையான காற்று நமக்கு உயிர் மூச்சு

பூமி பந்தை சிரிக்க வைக்கும்

உயிரோட்டமாச்சு

ஆரோக்கியத்தின் ஆணிவேராச்சு

கிராமத்திலே  காடு மேடு 

வயல் வெளி

சந்துபொந்து என தங்கத் தேரில் உலாவருகுது

ரொம்ப மகிழ்ச்சியாக தென்றலாய்  வீசுது

மனிதனும் சிரித்து வாழுறான்

நோய்நொடிய  விரட்டி அடிக்கிறான்... 

காற்றின் சலசலக்கும் இசையில்

பூமித் தாயும் மகிழுது 




நம்மை பச்சை பட்டாடையால் அரவணைக்குது 

விஞ்ஞான வளர்ச்சி என்று நகரமயமானது

மரமெல்லாம் வெட்டி வானுயர கட்டிடமானது 

தொழிற்சாலை பெருகி

கட்டுப்படுத்தாமாசு 

 காற்றில் கலக்குது 

வாகனப் புகை குபுகுபுவென வெளியேறுது

தூய காற்றில் கலக்குது

நாம் தூயகாற்றுக்கெங்கே போவது 

இருப்பதை சுவாசிக்குறோம் 

நோய்நொடிய பெருக்குறோம் 

வாழ்நாள் வீதம்தானாக  குறையுது 

யாரை தப்பு சொல்வது 

ஆடம்பரம் நம்மை ஆட்டிப்படைக்குது 

காடு கட்டாந்தரையானது 

நாடு தூயகாற்றுக்கிங்கே ஏங்குது 

பூமித் தாயும் வாடித்தான்

பசுமை இழந்து அழுகுது

என்பிள்ளைகளை எப்படி காப்பேன் என கலங்குது

நீரை போல என் மக்கள் 

காற்றையும் விலைக்கு வாங்கும் நிலை வந்திடுமென 

புலம்புது 

தன் பிள்ளைகளிடம் கோரிக்கை வைக்குது  

மாசற்ற காற்று நமக்கு வரம் என்குது 

அதை காப்பது நம் கடமையென உரைக்குது

வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம்

தூய காற்றை நாம்பெறுவோம்

மாசற்ற உலகம் தான்

நமக்கு இங்கே சொர்க்கம்தான்

நிலம் நீர் காற்று நமக்கு உயிர் மூச்சு

மாசு தவிர்த்து மரங்களை வளர்ப்போம்

தூயகாற்றை சுவாசித்து 

ஆரோக்கியம் காத்து வாழ்வோம்.. 

மரம் தான் நமக்கு நண்பன் 

உயிர் காக்கும் தோழன்.. 

தூய்மையான காற்று நமக்கு

ஆரோக்கியத்தின் தாய் அல்லவா ...!!! 

மாசு குறைத்து மீட்டிடுவோம் தூயகாற்றைதான்..!!! 

அதை சுவாசித்து வலம் வருவோம் 

பூமித் தாயின் மடியில் தான்... !!! 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்