தூய்மையான காற்று!

Mar 06, 2026,04:12 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


தூய்மையான காற்று நமக்கு உயிர் மூச்சு

பூமி பந்தை சிரிக்க வைக்கும்

உயிரோட்டமாச்சு

ஆரோக்கியத்தின் ஆணிவேராச்சு

கிராமத்திலே  காடு மேடு 

வயல் வெளி

சந்துபொந்து என தங்கத் தேரில் உலாவருகுது

ரொம்ப மகிழ்ச்சியாக தென்றலாய்  வீசுது

மனிதனும் சிரித்து வாழுறான்

நோய்நொடிய  விரட்டி அடிக்கிறான்... 

காற்றின் சலசலக்கும் இசையில்

பூமித் தாயும் மகிழுது 




நம்மை பச்சை பட்டாடையால் அரவணைக்குது 

விஞ்ஞான வளர்ச்சி என்று நகரமயமானது

மரமெல்லாம் வெட்டி வானுயர கட்டிடமானது 

தொழிற்சாலை பெருகி

கட்டுப்படுத்தாமாசு 

 காற்றில் கலக்குது 

வாகனப் புகை குபுகுபுவென வெளியேறுது

தூய காற்றில் கலக்குது

நாம் தூயகாற்றுக்கெங்கே போவது 

இருப்பதை சுவாசிக்குறோம் 

நோய்நொடிய பெருக்குறோம் 

வாழ்நாள் வீதம்தானாக  குறையுது 

யாரை தப்பு சொல்வது 

ஆடம்பரம் நம்மை ஆட்டிப்படைக்குது 

காடு கட்டாந்தரையானது 

நாடு தூயகாற்றுக்கிங்கே ஏங்குது 

பூமித் தாயும் வாடித்தான்

பசுமை இழந்து அழுகுது

என்பிள்ளைகளை எப்படி காப்பேன் என கலங்குது

நீரை போல என் மக்கள் 

காற்றையும் விலைக்கு வாங்கும் நிலை வந்திடுமென 

புலம்புது 

தன் பிள்ளைகளிடம் கோரிக்கை வைக்குது  

மாசற்ற காற்று நமக்கு வரம் என்குது 

அதை காப்பது நம் கடமையென உரைக்குது

வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம்

தூய காற்றை நாம்பெறுவோம்

மாசற்ற உலகம் தான்

நமக்கு இங்கே சொர்க்கம்தான்

நிலம் நீர் காற்று நமக்கு உயிர் மூச்சு

மாசு தவிர்த்து மரங்களை வளர்ப்போம்

தூயகாற்றை சுவாசித்து 

ஆரோக்கியம் காத்து வாழ்வோம்.. 

மரம் தான் நமக்கு நண்பன் 

உயிர் காக்கும் தோழன்.. 

தூய்மையான காற்று நமக்கு

ஆரோக்கியத்தின் தாய் அல்லவா ...!!! 

மாசு குறைத்து மீட்டிடுவோம் தூயகாற்றைதான்..!!! 

அதை சுவாசித்து வலம் வருவோம் 

பூமித் தாயின் மடியில் தான்... !!! 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Women's Day: மகளிருக்கு வாக்குறுதிகள்.. நாளை மாமல்லபுரத்தில் அறிவிக்கிறார் விஜய்.. தவெக தகவல்

news

வாக்கு சதவீதத்தை காட்டி அழுத்தம் தர மாட்டோம்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

news

கூட்டணி வெற்றிக்காக தியாகம் செய்ய காங்கிரஸ் தயார்: மாணிக்கம் தாகூர் பல்டி

news

ராஜ்யசபா தேர்தல் 2026.. திமுக, அதிமுக, காங்., பாமக, தேமுதிக வேட்பு மனுக்கள் ஏற்பு

news

ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டி?...விருப்பமனு அளித்த மகன் ரவீந்திரநாத்

news

தமிழக கவர்னர் ஆர் .என். ரவியை அதிரடியாக மாற்றியதற்கு இது தான் காரணமா?

news

திமுக கூட்டணியில் கமல் கட்சிக்கு எத்தனை சீட்? வெளியான பரபரப்பு அப்டேட்

news

துபாயில் ஏவுகணை தாக்குதல் ...மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்

news

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் ரிசல்ட் ...இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து மதுரை பெண் சாதனை

அதிகம் பார்க்கும் செய்திகள்