- கவிதா உடையப்பன், சேலம்
கண்ணை மூடி நான் பார்த்தேன்
கண் இல்லாதவர் எவ்வாறு உணர்வார் என்று:
என் மாமனின் கடுகடுப்பான முகம் எனக்குப் புலப்படவில்லை
என் தாயின் தயவான முகம் எனக்குத் தெரியவில்லை
என் தந்தையின் துடுக்கான முகம் எனக்குத் தோன்றவில்லை
என் அண்ணன் காட்டும் அன்யோன்யம் எனக்குத் தென்படவில்லை
முக பாவங்கள் தெரியாததினால், அவ்வடிவங்களில் நான் வேற்றுமை காணவில்லை.

தரையில் உள்ள மேடு பள்ளங்களை கைத்தடி இல்லாது நான் அறியேன்
வாழ்வில் உள்ள மேடு பள்ளங்களை கோல் இன்றி யார் அறிவார் ?
நீ மழையை, மேக மூட்டத்தில் காண்பாய்
நானோ மண் வாசனையில் காண்பேன்.
பூக்களை, அதன் மனம் கொண்டு உணர்வேன்
மனிதர்களை, அவர்கள் குணம் கொண்டு உணர்வேன்.
எப்பொருளும் என்னை வசியப்படுத்தியதும் இல்லை
திசை திருப்பியதும் இல்லை.
எனக்கு நிலைக் கண்ணாடியும் வேண்டாம்
மூக்குக் கண்ணாடியும் வேண்டாம்.
“இரவையும் பகலையும் காணாததினால், இருட்டைக் கண்டு நான் அஞ்சியதில்லை ;
எனினும் காலைப் பனியையும், மாலை மதியையும் காணமுடைவில்லையே!“
என்று வருந்துவதுண்டு
பார்த்தால் தான் காதலா ?
பார்க்காமலே நிஜத்தை நேசிபவர்கள் நாங்கள்!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
Greyshark.. பார்க்க அப்படியே பென்குவின் மாதிரியே இருக்கும்.. ஆனால் மேட்டரே வேறப்பா!
கண் பார்வை அற்றோரின் நேசம் நிஜம்
தமிழகம் பற்றிய கவர்னரின் கருத்து...மிக கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
TET தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
கோடியில் கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா?: அன்புமணி ராமதாஸ்
மாவீரன் பொல்லான் சிலை.. திறந்து வைத்து புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரிதிலும் அரிதான சென்யார் புயல்.. இந்தோனேசியாவில் கரையைக் கடந்தது!
2 கைகள் கூப்பிய குறியீடு.. திருப்பிய பிரதமர் மோடி.. ராமர் கோவிலில் அரங்கேறிய புதிய டெக்னாலஜி!
ஓபிஎஸ்ஸின் புதிய கட்சி முடிவுக்கு இது தான் காரணமா.. யு டர்ன் போடுவது ஏன்?
{{comments.comment}}