ஒரு பக்க கட்டுரை.. முயற்சியின் மந்திரம்!

Apr 15, 2026,03:58 PM IST

- தி.மீரா


வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று எல்லாரும் நினைக்கிறார்கள். ஆனால் அந்த வெற்றிக்காக தேவையான முயற்சியை தொடர்ந்து செய்யும் மனிதர்கள் சிலரே. ஆசை எல்லோருக்கும் இருக்கலாம்; ஆனால் அதை நிஜமாக மாற்றுவது முயற்சிதான்.


ஒரு விதை மண்ணில் விழுந்தால் உடனே மரமாக மாறாது. அது முளைக்க வேண்டும், வளர வேண்டும், பல சோதனைகளை கடக்க வேண்டும். அதைப் போலவே மனிதனின் வாழ்க்கையும் முயற்சிகளின் மூலம் தான் உயர வேண்டும். ஒரே ஒரு முயற்சியில் தோல்வி வந்துவிட்டால் பலர் தளர்ந்து விடுகிறார்கள். ஆனால் தோல்வி என்பது முடிவு அல்ல; அது ஒரு பாடம். முயற்சி செய்வதில் தொடர்ச்சி மிகவும் முக்கியம். இன்று செய்த முயற்சியை நாளை மறக்கக்கூடாது. 


சிறிய முயற்சிகள் கூட நாளுக்கு நாள் சேர்ந்து பெரிய வெற்றியாக மாறும். ஒரு துளி துளியாக சேரும் தண்ணீர் தான் கடலாகிறது. அதுபோல் தினமும் செய்யும் சிறு முயற்சிகள் தான் வாழ்க்கையை உயர்த்தும்.


நேரம் மிகவும் முக்கியமானது. “பிறகு பார்க்கலாம்” என்று தள்ளிப்போடும் பழக்கம் பல வாய்ப்புகளை இழக்கச் செய்கிறது. செய்ய வேண்டியதை உடனே செய்வது முன்னேற்றத்தின் முதல் படி. 




நேரத்தை மதிக்கும் மனிதன் வாழ்க்கையில் உயர்வான். மற்றவர்களைப் பார்த்து ஒப்பிடுவது தேவையில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் பாதை தனித்துவமானது. நம்முடைய இலக்கை நோக்கி நாமே நம்மை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். 


நம்பிக்கை மற்றும் முயற்சி சேர்ந்தால் எந்த இலக்கும் எட்டாததல்ல. முடிவில், வெற்றி என்பது அதிர்ஷ்டத்தின் பலன் அல்ல; அது தொடர்ந்து செய்யும் முயற்சியின் பலன். இன்று நீங்கள் எடுக்கும் ஒரு சிறிய முயற்சி, நாளைய பெரிய வெற்றியின் தொடக்கம் ஆகலாம்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

news

அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!

news

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!

news

Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!

news

முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!

news

Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!

news

My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்