சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 2.25% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2025 ஆம் கல்வி ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி, 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதேபோல் 11ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடந்து முடிந்தது.
இதனையடுத்து வினாத்தாள் திருத்தம் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகளும் விரைவாக முடிவடைந்தது. இதனால் இரண்டு நாட்கள் முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது.

அதன்படி,10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் இன்று வெளியானது. இதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 93.80% மாணவர்கள் பாஸ் ஆகியுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவியர் 95.88 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.74 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக இந்த தேர்தலில் மாணவர்களை விட மாணவிகளே 4.14 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024ம் ஆண்டை விட 2.25 சதவீதம் கூடுதல் தேர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.26 சதவீதமாக உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.63 சதவீத மாணவ மாணவியரும், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 97.99 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}