சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 2.25% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2025 ஆம் கல்வி ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி, 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதேபோல் 11ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடந்து முடிந்தது.
இதனையடுத்து வினாத்தாள் திருத்தம் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகளும் விரைவாக முடிவடைந்தது. இதனால் இரண்டு நாட்கள் முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது.
அதன்படி,10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் இன்று வெளியானது. இதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 93.80% மாணவர்கள் பாஸ் ஆகியுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவியர் 95.88 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.74 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக இந்த தேர்தலில் மாணவர்களை விட மாணவிகளே 4.14 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024ம் ஆண்டை விட 2.25 சதவீதம் கூடுதல் தேர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.26 சதவீதமாக உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.63 சதவீத மாணவ மாணவியரும், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 97.99 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}