தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!

May 16, 2025,05:46 PM IST

சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 2.25% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.


2025 ஆம் கல்வி ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொது தேர்வுகள்  கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி, 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதேபோல் 11ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடந்து முடிந்தது.


இதனையடுத்து வினாத்தாள் திருத்தம் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகளும் விரைவாக முடிவடைந்தது. இதனால் இரண்டு நாட்கள் முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது.




அதன்படி,10ம் வகுப்பு  மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் இன்று வெளியானது.  இதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 93.80% மாணவர்கள் பாஸ் ஆகியுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவியர் 95.88 சதவீதமும்  மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.74 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக இந்த தேர்தலில் மாணவர்களை விட மாணவிகளே 4.14 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.


2024ம் ஆண்டை  விட 2.25 சதவீதம் கூடுதல் தேர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.26 சதவீதமாக உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.63 சதவீத மாணவ மாணவியரும், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 97.99 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்